Wednesday, November 09, 2011

மேகமே! மேகமே!


மேகமே! நீ க‌லைந்து போவ‌துற்க்குள் மழையாகு

மொட்டே! நீ க‌ருகிப் போவ‌துற்க்குள் க‌னியாகு

தென்றலே! நீ புய‌லாக மாறுவ‌த‌ற்க்குள் வீசிவிடு

அலையே! நீ சுனாமியாக மாறுவ‌த‌ற்க்குள் க‌ரையைச் சேர்ந்து விடு

நண்பனே! நீ மண்ணாகும் முன் ம‌னித‌னாகு

மனிதா! நீ காலம் க‌ரைவ‌த‌ற்க்குள் காரிய‌மாற்று.

இளைய ச‌முதாயமே!


இளைய ச‌முதாயமே!

உருகி போவ‌த‌ற்க்கு நீ மெழூகுவ‌ர்த்தியா ?

காற்றில் க‌ரைந்து போக நீ க‌ற்பூரமா?

உதிர்ந்து போவ‌த‌ற்க்கு நீ பூக்களா?

ஓய்ந்து போவ‌த‌ற்க்கு நீ காற்றா?

ப‌ய‌முறுத்த வ‌ரும் சுனாமியா நீ?

ஒரு ப‌க்கம் இலட்சிய‌த்தாலும்,

ஒரு ப‌க்கம் விடாமுய‌ற்சிய‌லும்,

ஒரு ப‌க்கம் த‌ன்ன‌ம்பிக்கையாலும்,

ஒரு ப‌க்கம் ம‌னித‌நேய‌த்தாலும் சூழப்பட்ட தீவு நீ!!!

அற்ப விசயங்களைப் பார்த்து பின் தங்கி விடாதே!!!
துணிந்து நில்!!


முடியும் தோழி!!!


முடியும் என்று மனம்
முனைப்பாய் இருக்கயில்
முடக்கம் எதற்க்கு
முனைந்து செயல் படுவோம்
இதோ மிக அருகில் வெற்றி!!

Saturday, August 27, 2011

படித்ததில் பிடித்தது........



ஆசிரியர் : அனுராதா ரமணன்

கதை : இரண்டாவது வாழ்க்கை

" இதோ ... இதுதான் சந்தோஷம். இந்த நிமிஷத்து இனிமை ...
நாளைக்கு எப்படியோ? இரண்டாவதாய் ஒரு வாழ்வு வரும்....
அது வரையில் மூலையில் முடங்கி கிடப்போம்
என்று விரக்தியுடன் இருக்காதே....
முதல் வாழ்க்கையை கூடுமான வரையில் செப்பனிடப் பார்.
பசுமைகளைத் தாங்கப் பழகு .... அதனால் வலுவிழக்கமாட்டாய். பலசாலியாவாய்... நாளை வரும் காலம் நமதில்லை....
கிடைத்த போது அனுபவி... கிடைத்ததை அனுபவி....."

நீ


ஒவ்வொரு விருட்சமும் மண்ணோடு போரடித்தான் மேலே வருகின்றது!

ஒவ்வொரு பூக்களும் தினம் தினம் போராடித்தான் மலர்கின்றது!

ஒரு ஈக் கூடத்தான் இந்த உலகத்தில் வாழ போராடுகின்றது!!

விதைத்தவனும் தூங்கலாம், ஆனால் விதைகள் தூங்குவதில்லை,
இந்த உலகை காண முட்டி மோதி பயிராகிறது, பயன் தருகின்றது!

உலக வரலாற்றில் போர்களங்கள் மாறுகின்றன,
போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது!!

கருவினிலேயே இலட்சம் அணுக்களோடு
போராடித்தான் வெளியே வருகிறோம் ..

போராடும் வரைதான் மனிதன்...
போராடு !! போராட்டத்தின் முடிவில் ஆயிரத்தில் ஒருவனாய் நீ

(Chillzee competition poem)

Wednesday, July 27, 2011

தண்ணீர் .......... தண்ணீர்...............

தண்ணீர் .......... தண்ணீர்...............

தண்ணீர் .... தண்ணீர்...... என்று படமெடுத்து விட்டார் திரு பாலசந்தர் அவர்கல்..
தண்ணீருக்காக ஒரு புது தேசத்தையே காட்டி விட்டார் திரு வைரமுத்து அவர்கள் ......

கோடைகாலத்தில் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை ஏனென்றால் கோடையின் வெப்பமும், வேர்வையும் ஆனால் மழைக்காலத்தில் .......

வெள்ளாமையின் உயிர் மூச்சு தண்ணீர்தான்!!!

ஆடு, மாடு போன்ற பேச்சற்ற ஜீவங்களில் இருந்து பேசுகின்ற மனிதன் வரை அனைத்தின் உயிர் நாடியும் தண்ணீர்தான்!!!

ஆறும், குளமும், ஏரியும் நிரம்பி வழிந்து அதன் சந்தோசத்தைக் காட்டுகின்றன....

நீர் நிலைகளிலோ மீன்களின் கொட்டம் நீரால் .....

கொக்குகளுக்கோ கொண்டாட்டம் மீனால் .......

குளத்தில் கதைப் பேசிக் கொண்டிருக்கின்றன அல்லியும், தாமரையும்......

மலர்களை கண்டதும் பெண்களின் உள்ளமும்,முகமும் விரிகிறது தாமரையாய்........

கன்னிப் பெண்களின் மலர்ந்த முகம் அனைவருக்கும் இன்பத்தை அளிக்கிறது.......

இப்படி மனிதர்களின் இயல்புகள் மகிழ்ச்சி அளிக்கின்றது....

கால்வாய்கள், ஓடைகளின் நீர் வரத்தால், ஓரங்களில் உள்ள புல்வெளிகள் முதல் தோட்டம் , தோப்புகள் அனைத்தும் ஆரவரித்து தாகம் தீர்க்கின்றது.....

விவசாயிகளுக்கோ ஆனந்த பரபரப்பு உடலெங்கும்....

மரங்களும் தங்களின் பணிகளை தொடங்குகின்றது அடுத்த மழைக்காக........
மரம் இதை மட்டுமா செய்கின்றது...

மனிதனின் இன்றியமையாத தேவைகளான உணவு, உடை இவற்றுக்கு மரங்கள்தான் காவல் தெய்வம்...

நீரின்றி அமையாது உலகம் என்ற வாக்குகேற்ப,
நீரை உலகுக்கு அளிப்பதில் பெரும் பங்கு வகிப்பது மரங்கள்தான்!!!

நீரை ஆவியாக்கி மேலே அனுப்பி கருமேகமாக மாற்றுகின்றது.....

எவ்வளவுதான் தொழில் நுட்பத்தில் வளர்ந்த நாடாக இருந்தாலும்
தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது,
தண்ணீருக்காக கை ஏந்தித்தான் ஆக வேண்டும்

மழை நீரை சேமிப்போம், நீரை சிக்கனமாக பயன்படுத்வோம்!!
மனிதர்களைப் போல் தன்னை மட்டும் நினையாமல்,

உலகையே வாழ வைக்கும் மகாத்மாக்களான மரங்களை வளர்த்து மனித வளம் மற்றும் நாட்டின் வளத்தைக் காப்போம்!!

வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!




Sunday, July 24, 2011

இளமையிலேயே கடமையாற்றுங்கள்

* யாருடைய குற்றங்களையும் காணாதே. பிறரது குற்றங்களைக் காணத்
தொடங்கினால் அதுவே கடைசியில்
உங்கள் இயல்பாகிவிடும்.
* மனித உடம்பு நிலையற்றது. இப்போது இருக்கிறது. ஆனால், அடுத்த கணம்
இல்லாமல் போய்விடும். அதற்குள் உன்னால் முடிந்த நல்ல செயல்களைச் செய்வது மேலானது.
* சாதனை ஆகட்டும். தவமாகட்டும். தீர்த்த யாத்திரை ஆகட்டும். பணம் சம்பாதிப்பது ஆகட்டும். எந்த நல்ல செயலையும் செய்வதென்று தீர்மானித்து விட்டால் அதை இளமையிலேயே செய்துவிடுங்கள்.
* ஆசையின் சாயலே நம் மனதில் அற்றுப் போக
வேண்டும். அப்போது தான் பிறவியில் இருந்து
விடுதலை கிடைக்கும்.
* நீங்கள் ஒரு நற்பணி செய்தால், அதனால் உங்கள்
பாவச்சுமை விலகும். தியானம், ஜபம், தெய்வீகச்
சிந்தனை இவற்றால் பாவம் குறைவதோடு புண்ணிய
பலன் நம்மை வந்தடையும்.
* யார் என்ன சொன்னாலும், மனதிற்குச் சரியென்று
பட்டதை துணிவோடு செய்து முடியுங்கள். நிச்சயம்
கடவுளின் துணை உங்களுக்கு கைகொடுக்கும்.
-சாரதாதேவியார்

Saturday, July 23, 2011

தெரிந்ததை சொல்லிக் கொடுங்கள்


நல்ல விஷயங்களைச் சொல்லும் போது கேட்பவருக்கும் தகுதி வேண்டும். தகுதி இல்லாதவனிடத் தில் நல்ல விஷயங்களைச் சொன் னாலும் பயனேதும் விளையாது. உலகியல் இன்பத்தின் மீதானஆசை, புறவுலக இன்பத்தையும், பந்ததத்தையும் தூண்டி விடுவதாக இருக்கும். வைராக்கியத்தின் (பக்தி) மீது வைக்கும் ஆசை நம்மை கட்டுக்களிலிருந்து விடுவிக் கும். உங்களுடைய துன்பங்களைக் கண்ணீருடன் இறைவனிடம் எடுத்துச் சொல்லுங்கள். மனச்சுமையை அவர்முன் இறக்கி வையுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை நிச்சயம் அவர் நிறைவேற்றி வைப்பார். இந்த உலகம் இறைவனுடையது. அவரது கையில் நாம் வெறும் பொம்மைகளே. அவர் நம்மை எப்படி வைத்தாலும், எங்கு வைத்தாலும் அதை நாம் திருப்தியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். விவேகமும், வைராக்கியமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயமாக இருக்க வேண்டியவை. இவை இருந்தால் தான் இல்லறமும் சோபிக்கும். துறவறமும் சோபிக்கும். தானங்களில் சிறந்ததாக இருப்பது ஞானதானமே. தனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு வழங்கிடும் மகத்தான பண்பினை எல்லோரும் பெற

Friday, July 22, 2011

பொறுமை தான் சிறந்த பண்பு


* உண்மை என்பதற்காக முரட்டுத்தனமாக சொல்வதில் பயனில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொன்னால் தான் சொல்பவருக்கும் மதிப்பு, உண்மைக்கும் மதிப்பு என்பதை உணருங்கள்.
* ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய குணங்களில் பொறுமை மிக முக்கியமானது. பொறுமையை விடச் சிறந்த பண்பு வேறு இல்லை.
* பெண்களுக்கு அழகு தருவது தங்கத்தால் ஆன
ஆபரணங்கள் என்று நாம் நினைக்கிறோம்.
உண்மையில் சிறந்த ஒரே ஆபரணம் நாணம் மட்டுமே. நாணத்தை இழந்தவள், பெண் என்ற தகுதியையே இழந்து விடுவாள்.
* மனதிற்கு அமைதி வேண்டும் என்று எண்ணுபவர்கள் முதலில் பின்பற்றவேண்டிய அடிப்படை குணம் பிறர் குற்றங்களைப் பற்றி எண்ணாமல் தன்னைப் பற்றி
அறியத் தொடங்குவது தான்.
* செல்வந்தர்கள் தங்கள் பணத்தைக் கொண்டு
ஆண்டவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். முடியாத ஏழைகளோ உடலுழைப்பால் தம்மால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும்.
* போதுமென்ற மனநிறைவிற்கு நிகரான செல்வம் எதுவுமில்லை. சாதிக்க முடியாததையும், உண்மையான பக்தியின் மூலமாக நிச்சயம் சாதித்துக் காட்டலாம்.



- சாரதாதேவியார்

Thursday, July 21, 2011

நல்லது நடக்குமென நம்புங்கள்ஏப்ரல்

* ஒரு மனிதனுக்கு நல்லகாலம் வந்தால் மட்டுமே அவன் மனம் ஆன்மிக
விஷயத்தில் நாட்டம் கொள்ளும்.
* ஆசைகள் அனைத்தும் நம்மை விட்டு எப்போது விலகிச் செல்கிறதோ அந்தப்
பிறவிதான் நம்முடைய கடைசிப் பிறவியாகும்.
* கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. உலகைப் படைத்தவன் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான். நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்பி அவனைச் சரணடையுங்கள்.
* நம்மை விட்டு என்றும் நீங்காத உறவு கடவுள் மட்டுமே. அவனுடைய கருணைக்காக மனம் ஒன்றி வழிபடுங்கள். நிச்சயம் பிரச்னைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று மகிழ்வீர்கள்.
* முதலில் ஒழிக்கவேண்டியது சோம்பல் மட்டும் தான். அதிகாலையில் எழுந்து தியானப்பயிற்சியில் ஈடுபடுவதால் அபரிமிதமான ஆற்றலை நாம் பெற்று விடமுடியும்.
*பணியிடத்தில் ஒவ்வொரு வேலையையும் தவமாக எண்ணி புனிதமான பணியாற்றுங்கள்.
* நாம் அனைவருமே தெய்வீகக்குழந்தைகள். வாசனை மிக்க மலர்களை ஆண்டவன் விரும்பி ஏற்பது போல, நம்மையும் கடவுள் அன்போடு அரவணைத்துக் கொள்வார்.
-சாரதாதேவியார்

Wednesday, July 20, 2011

மீண்டும் பிறக்காத தருணங்கள்!!

இன்பத்தைத் தவிர வேறு அறியாத பள்ளிப் ப‌ருவ‌ம்‍‍‍‍‍....
பள்ளியின் இடைவேளையில் கிடைக்கும் தின்பண்டங்கள்..
பிடிக்கும் போது ஒட்டிய வண்ணத்துப் பூச்சியின் வண்ணம்...

மின்சாரம் இல்லாத இரவுகளில்
மணல் மேட்டில் நண்பர்களோடும்,
நிலவோடும் ஆடிய விளையாட்டு ....

குளு குளு குளியல் ஆற்றிலே ,
சுடச் சுடச் உணவு ஆற்றங்க‌ரையிலே ....

பூ ம‌ல‌ரும் தருணம் .....

புல்லின் நுனியில் சிரித்துக் கொண்டிருக்கும்
காலைப் ப‌னித்துளி ....

ம‌ழலையின் குறும்பு சிரிப்பு ....

ஊர் அட‌ங்கிய‌ வேளையில் , மெல்லிய‌தாக கேட்க்கும் பாட‌ல்.....

தெய்வ‌த்தின் சந்நிதான‌த்தில் கிடைக்கும் ம‌னஅமைதி......

அவ‌ச‌ர நேரத்தில் செய்த உதவிக்காக பெற்ற கண்ணீரும், புன்ன‌கையும்......

குழந்தையின் எச்சில் ஒழுகும் முத்த‌ம்.....
தாயின் க‌த‌க‌தப்பில், குழந்தையாக ம‌டியில் உறங்கிய‌ க‌வ‌லை ம‌றந்த உறக்கம்....

மீண்டும் பிறக்குமா?

சோம்பேறித்தனம் கூடாது




* எப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒரு வேலையில் மனம் ஈடுபடும் போது, அது இரண்டு நிலைகளில் செயல்பட்டு நம்மை அழைத்துச் செல்கிறது.
* முதலாவது நிலையில் எப்போதும் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருப்பதால், கெட்ட எண்ணங்கள் மனதில் தோன்றாது. சோம்பித் திரியும்போதுதான், மனத்தில் எல்லாத் தீய எண்ணங்களும் தோன்றும்.
* இரண்டாவது நிலையில், செயல்புரிவதன் மூலம் கர்மத்தளையை விலக்க முடியும். வேலையில் முழுமையாக ஈடுபடும்போது படிப்படியாக மனதில் வைராக்கியம் உதயமாகும்.
* சிறிய வேலையாயினும், பெரிய வேலையாயினும் அதை முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். விரைந்தோடும் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பாக்குங்கள்.
* காலையிலும், மாலையிலும் சிறிது நேரமாவது பிரார்த்தனை, ஜபம், தியானம் செய்யுங்கள். அப்போது தான் நம் எண்ணங்கள், பேச்சு, செயல் அனைத்தும் உயர்ந்தவையாக நம்மை மேல்நிலைக்கு இட்டுச் செல்பவையாக அமையும்.
- சாரதாதேவியார்

Wednesday, October 27, 2010

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும்.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.

இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P.
Trust 9,
West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104Cell:+91 98433 19933
E mail :ramdost@sancharnet.in
மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
(This post taken and copied from another blog for passing this message to everyone)

Thursday, August 20, 2009

இரண்டு வரி மந்திரம்

"வெற்றி" என்ற மூன்றெழுத்தில் உள்ள "வெறி" வேண்டுமடி தோழி
வாழ்வின் எட்டாத உயரங்களை எட்ட.....

Friday, April 25, 2008

அம்மா

அன்பை வெளிப்படுத்துவதில் வற்றாத நைல் நதி நீ!

துன்பத்தில்,"ஏம்மா என்னை பெற்றெடுத்தாய்
என்று கேட்கும் போதெல்லாம்
நான் சாதிக்க பிறந்தவள்"
என்று என்னையே எனக்கு உணர்த்தியவள் நீ!

பிர‌ச்ச‌னைக‌ளை கண்டாளே கூட்டுப்புழுவாய் சுருங்கும் என்னை,

உன‌க்கும் சிறகு வ‌ரும், வ‌ண்ணங்க‌ள் வ‌ரும்
என்று வ‌சந்த‌த்தை காட்டி பட்டாம்பூச்சியாய் மாற்றியவள் நீ!

ம‌கிழ்ச்சியிலும்,க‌வ‌லையிலும் நான் தேடும் தேவ‌தை நீ!

வெவ்வேறு முக‌ம் காட்டினாலும் நான்
விரும்பும் அன்பு முக‌ம் கொண்ட‌வ‌ள் நீ!

எத்த‌னை கோப‌ம் கொண்டு பேசினாலும்,
அடுத்த‌ நிமிட‌மே வெள்ளைக் கொடி காட்டும் ச‌மாதான‌ப் புறா நீ

இர‌வில் க‌சியும் நிலா வெளிச்சம் போல்
அன்பை ம‌ட்டுமே அள்ளித்த‌ரும் அட்ச‌ய‌ பாத்திர‌ம் நீ!!

எப்போதும் பிரியாமல் இருக்கும் பிரிய‌மான தோழி நீ!!

Thursday, November 29, 2007

பள்ளியின் கடைசி நாள்


எண்ணெய் வைத்து தலை வாரி விடுகிறாள் அம்மா
முகத்தில் ஒரே பூரிப்பு தன் மகள் பள்ளியில் சேரப்போகிறாளே!
என் எண்ணெய் வழியும் முகத்தை தன் முந்தானையால்
பவுடரையும் சேர்த்து துடைக்கிறாள்
சுண்ணாம்பு அடித்தது போல் பளிச்சிடுகிறது முகம்,
அப்பாவின் குண்டு விர‌லை பிடிக்க‌ முடிய‌ம‌ல் ந‌ட‌க்கிறேன்
ஒரு புது வித‌ ப‌ய‌த்தோடு புதிய‌ நாளை எண்ணி!
ஆம் அதே வித‌ ஒரு ப‌ழைய‌ ப‌ய‌ம்
என் முக‌த்தில் இப்போதும் ப‌ள்ளியின் க‌டைசி நாளை எண்ணி!

ப‌ள்ளியில் ந‌ட‌த்தும் அனைத்து போட்டிக‌ளிலும்
க‌ல‌ந்து கொண்டு ப‌ரிசு வாங்கும் நோக்க‌ம்,
எப்போதும் ந‌ட‌ந்த‌தில்லை,ஆனால் மனம் நினைக்கும்
அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று,
ஆனால் அடுத்த வருடம்?

எப்போதும் வெளுப்பாக‌ இருக்கும் க‌ரும் ப‌ல‌கை,
குளுகுளுவென‌ இருக்கும் புங்கம‌ர‌ நிழல்,
ஒயாம‌ல் வீசும் வேப்ப‌ம‌ர‌க்காற்று,
க‌லக‌ல வென்று பேச்சுக்குர‌லோடு இருக்கும் வ‌குப்ப‌றைக‌ள்,
ஆசிரிய‌ர்க‌ளை க‌ண்டாலே ந‌டுங்கும் மாண்வ‌ர்க‌ள்
இவை எல்லாம் இனி எப்போது?

ப‌ள்ளியின் க‌டைசி நாள் எற்ப‌டுத்திய‌ துக்க‌ம் ஒரு புற‌ம்,
அடுத்த‌து நான் ப‌டிக்க வைக்க‌ப்ப‌டுவேனா?
இல்லயா? என்ற க‌வ‌லை ஒரு புற‌ம்,
இப்ப‌டி ப‌ல‌வித‌ க‌ல‌க்க‌ங்களின் புதுவித‌ ப‌ய‌ம்தான்
ப‌ள்ளியின் க‌டைசி நாள்!!

க‌ரும்ப‌லகைக்கு சாறு கொண்டு வ‌ந்து பூசி,
க‌ருப்பாக்கி, அடுத்த‌ ஒரு ம‌ணி நேர‌த்தில் அது வெளுப்பாகி,
என்றும், எப்போதும், பட்டாம் பூச்சிக‌ளின் வ‌ண்ணத்தோடும்,
தேனீக்களின் சுறுசுறுப்போடும் இய‌ங்கி வ‌ரும் என் இனிய‌ நண்ப‌ர்க‌ளே!
உங்க‌ளை இனி எப்போது பார்ப்பேன்?

ஒவ்வொரு கோடை விடுமுறையும் சொல்லில் வ‌டிக்க‌ இய‌லாத‌து
ஆற்றில் மீன்க‌ளோடு மீனாக,
காட்டில் மானோடு மானாக,
ம‌ணலில் மின்னும் பொன்னாக‌,
காற்றில் ம‌லரின் ம‌ணமாக,
ஆடித்திரிந்த‌து , ஆஹா அது ஒரு வ‌ச‌ந்த‌ கால‌ம்.
ஆனால் இனி ஏது அந்த உல்லாச‌ம்!!!!

எப்பொழுது ப‌ள்ளி உணவு வேளை வ‌ரும் என்று காத்திருந்து,
ஒடி வ‌ந்து எதையாவ‌து வாங்கி நண்ப‌ர்க‌ளோடு சாப்பிட்டு,
விளையாட்டில் கூட‌ நண்ப‌ர்க‌ளோடு ச‌ண்டைப்போட்டு,
ஒரு வார‌ம் பேசாம‌ல் இருந்து அப்புறம் பேசி....
அட‌டா என்ன‌ இனிமையான‌ வாழ்கை அது.
அத‌ற்கெல்லாம் இதோ ஒரு முற்றுப்புள்ளி.

Saturday, November 03, 2007

உன்னிட‌மிருந்து
பூவிலிருந்து அதனுடைய மந்தகாச நறுமணத்தை பிரிக்க முடியுமா?

எங்கேயோ பிறந்து தென்றலிலே மிதந்து வரும்
இன்னிசையை,தென்றலிருந்து பிரிக்க முடியுமா?

அழகாக பரந்து விரிந்துள்ள வானத்திலிருந்து
நீலத்தை பிரிக்க முடியுமா?

விழிகளில் இருந்து தூக்கத்தைத்தான்
பிரிக்க முடியுமா?

எங்கே திரும்பினாலும் உள்ளம் கொள்ளை
கொள்ளும் இயற்கை,அந்த இயற்கையிலிருந்து
பசுமையை பிரிக்க முடியுமா?

ப‌னி வீசும் மார்கழி காலை,
அதிலிருந்து குளிரை பிரிக்க‌ முடியுமா?

இவையெல்லாம் எப்ப‌டி சாத்திய‌மில்லையோ
அதைப்போலவே உன‌க்குள் இருக்கும்
திறமையை யாராலும் உன்னிட‌மிருந்து பிரிக்க முடியாது

நமக்காக காத்திருக்கும் வாய்ப்புக‌ளை
யாராலும் தட்டிப் ப‌றிக்க‌ முடியாது,
துணிந்து செய‌ல் ப‌டுவோம்,
இதோ மிக‌ அருகில் வெற்றி!!!!