Tuesday, January 29, 2013

படித்ததில் பிடித்தது: மனித மூளை

மனித மூளையும் அதன் செயல்திறனும் மற்றும் மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்:-

மனித மூளையும் அதன் செயல்திறனும்

1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.
...
2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்.

மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்:

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே குளுக்கோஸ் இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்: மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய இனிப்பு சாப்பிடுதல்: நிறைய இனிப்பான பண்டங்களை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை. நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
 
(Thanks to Tamil Karuthukalam)

Wednesday, January 23, 2013

ஆண் என்ன? , பெண் என்ன?


அன்புள்ள நண்பர்களே,
வணக்கம். நலம்தானே? என்னை பாதித்த இரண்டு விஷயங்களுக்காக நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். நான் என்னை சுற்றி நடந்த, நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்கிறேன். நிச்சயம் நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள்.
சமீபத்தில் பெண்மை வாசகி ஒருவர் தான் கருவுற்றிருப்பதாகவும், தன் கணவன் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்படி புரிய வைப்பது, இது என் கையில் இல்லை என்று?
இதைப் படித்ததும் ஒரு புறம் இவரைப் போல பாதிக்கப்பட்டிருக்கும் சகோதரிகளை எண்ணி அழுவதா? அல்லது இன்னும் நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று தெரியாமல் இருக்கும் இந்த கோமாளிகளை எண்ணிச் சிரிப்பதா? என்று தெரிய வில்லை. இதை நான் சாதாரணமாக பார்க்க வில்லை. ஒரு முறை நான் என்னுடய ஊர் செல்வதற்க்காக பேருந்திற்க்காக காத்துக் கொண்டிருந்தபோது, எங்களுடய ஊரைச் சேர்ந்த பெண்ணைப் பார்த்தேன். என்னை விடச் சின்னப்பெண் மூன்று பெண் குழந்தைகளை வைத்திருந்தாள். வயிற்றிலும் சுமை.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னம்மா இது? என்னக்க பன்றது. மூனும் பொண்ணா போயிடிச்சி. அடுத்ததாவது பையனா இருக்காதா என்றாள். எனக்கு மயக்கமே வரும் போல் இருந்தது. அடுத்ததும் பெண்ணாக போய் விட்டால் என்றேன். வெட்கச் சிரிப்புடன், திருப்பி முயற்ச்சி பண்ண வேண்டியதுதான் என்றாளே பார்க்கலாம். அப்புறம் ரகசியக் குரலில் பையன பெக்கலனா யாரும் மதிக்கவே மாட்டென்றாங்க என்றாள். எங்கே போய் முட்டிக் கொள்வது? எங்கே ஆரம்பிக்கிறது தவறு? ஒரு சமூதாயம் மதிப்பதற்க்காகவா ஒரு ஆண் பிள்ளையை பெற்றுக் கொள்கிறார்கள்? மதிப்பது என்றால் எந்த விதத்தில்?, இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள்.

இதற்க்கு அடிப்படை காரணமாக நான் பார்ப்பது அறியாமையைத்தான். கிராமங்களில் இன்னும் பெண்களுக்கு முழுமையாக கல்வி அறிவு இல்லை. அப்படியே இருந்தாலும், சுற்றி இருப்பவர்களுக்கும், கணவனுக்கும் கட்டுப்பட்டு கிடக்கிறாள்.

இப்படி இவர்கள் பெற்றெடுக்கும் ஆண் பிள்ளைகளை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். எதற்கெடுத்தாலும் அவன் ஆம்பிள அவன் வழிக்கு நீ ஏன் போற என்று பெண்ணை தாழ்த்தியும், ஆணை உயர்த்தியும் பேச ஆரம்பிக்கிறார்கள். இங்கே இருந்து ஆரம்பிக்கிறது ஆண் என்ற தலைக்கணம். நாம என்ன செய்தாலும் தப்பில்லை என்ற எண்ணம் பெற்றோர்களால் அவரகளுக்கே தெரியாமல் ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால் இவ பொம்பளதானே என்ற ஒரு தாழ்வான எண்ணம் இயற்கையில் ஏற்படுகிறது. பெண்கள் தனக்கு கீழ் படிந்தவர்கள் என்ற ஆழமான எண்ணம் சிறு வயது முதல் உண்டாகிறது.

ஆனால் இதற்க்கு விதிவிலக்கான குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதை எல்லாம் தாண்டி, நிறய திரைப்படங்களில் நான் பார்த்திருக்கிறேன் பொம்பளன்ன ஒழுங்க அடக்கமா இருக்கணும். எந்த தப்பையும் தட்டிக் கேட்க கூடாது. அப்புறம் ஒருவன் பயந்து விட்டால், உடனே பொம்பள மாதிரி போய் சேலையும், வளையலும் போட்டுக்கோ என்று சொல்வது. பெண்கள் என்றால் ஆணுக்கு அடங்கியவள், கட்டுப்பட்டவள் என்ற எண்ணம் கொண்ட ஆணாதிக்க சமுதாயம். என் குலம் புலியை முறத்தால் அடித்து விரட்டிய மங்கையர் குலம். இந்த கைகள் சமைத்து போட மட்டுமல்ல, சமயத்தில் சரித்திரம் படைக்கவும் செய்யும் ஆண்குலம் புரிந்து கொள்ள வேண்டும். தொட்டிலை ஆட்டும் கை, தொல்லுலகம் ஆளும் கை என்பதை மறக்க வேண்டாம். தாய்மார்கள் இதை முதலில் புரிந்து கொண்டு பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகள் முன்பு மட்டம் தட்டி பேசுவதை நிறுத்துங்கள்.


சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;




எந்த விதத்தில் இவர்கள் உயர்ந்தவர்கள். நீயும் பத்து மாதம், நானும் பத்து மாதம். ஒரு விஷயத்தைத் தவிர உடல் அமைப்பு மட்டும் வலிமையைத்தவிர மற்றவை எல்லாவற்றிலும். நீயும் நானும் சமம். இதை ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு புரிய வையுங்கள்.
பெண்ணை கவர்ச்சி பொருளாக, கேவலமான கண்ணோட்டத்தோடு பார்க்காமல் அவளும் உன்னைப் போல் சதையும், இரத்தமும், உணர்ச்சிகளும் கொண்ட மனுஷி என்பதை உணர்த்துங்கள். உணராத ஆண்கள் இனிமேலாவது உணருங்கள்.

இதைப் போலவே சில குடும்பங்களில் ஆண் குழந்தை என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பார்கள். பெண் குழந்தை எதை கேட்டாலும் தள்ளிப் போடுவார்கள். அதேப் போல் பள்ளிகளில் கூட வித்தியாசம் இருக்கும். அவன் ஆம்பிள புள்ள நாள பின்ன குடும்பத்த காப்பாத்துவான். நீங்க அடுத்த வீட்டுக்கு போய் ஆக்கி கொட்ட போறவ, எதுக்கு உசந்த பள்ளிக்கூடம் என்பார்கள். தன்னை மட்டுமல்ல தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் காப்பாற்றும் தன்மை கொண்டவள் பெண். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு வீடு சிறக்கும். ஒரு வீடு சிறந்தால் ஊர் சிறக்கும். ஒரு ஊர் சிறந்தால் ஒரு மானிலம் சிறக்கும். ஒரு மானிலம் சிறந்தால் என் நாடு சிறக்கும். தயவு செய்து கல்வியில் பாரபட்சம் பார்க்காதீர்கள். என் தோழிகள் அனைவரும் சிறந்த கல்வியாளர்களாகவும், சிறந்த நிர்வாகிகளாகவும் விளங்க வேண்டும். இனிமேல் வரும் சந்ததிகள் நிச்சயம் சமமான சகோதர, சகோதரி பாசத்தோடு இருக்க இப்பொழுதிருந்து பாடுபடுவோம். இது நம் கையில் தான் இருக்கிறது. நாம் நினைத்தால் நிச்சயம் ஏற்றத்தாழ்வுகளை களையலாம்.


எந்த குழந்தையாக இருந்தால் என்ன? நாம் அந்த குழந்தயை தாய்ப்பற்று, நாற்றுப்பற்று, உயிர்கள் அனைத்தின் மீதும் பற்று வைத்து அன்பே சிவம், அன்பே யேசு, அன்பே அல்லா என்று அதற்க்கு உணர்த்துவோம். வயதான காலத்தில் நம் வலியும் , வேதனையும் புரிந்து கொண்டு நம்மை குழந்தையாக பாவித்து நம்மிடம் அன்பு காட்டும் பண்பை நம்மிடம் இருந்து ஊட்டுவோம். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ அதை ரசியுங்கள். முன்பிருந்த நிலை தற்பொழுது மாறி இருக்கிறது. அதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் விகிதம் மிகக் குறைவு. சில இடங்களில் பெண் குழந்தையை கொன்று விடுகிறார்களாம். எழுதும் பொழுதே கண் கலங்குகின்றது. அவ்வளவு வேண்டாதவர்களா பெண்கள். தாய்மார்களே பெண்களின் விகிதம் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. நாளை நீங்கள் உங்கள் பிள்ளைக்கே பெண் தேடும் போது சிரமப்படலாம்.

கிராமப்புறங்களில் நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் முயற்ச்சி எடுத்தால் மட்டுமே இந்த பிரச்சினைகள் குடும்பக்கட்டுப்பாடு, சிசுக்கொலை, விழிப்புணர்வு மற்றும் பெண் கல்வி போன்றவை தீர்க்க முடியும். பார்க்கலாம்.
என்ன தோழிகளே நான் சொல்வது சரிதானே?உங்கள் கருத்துக்களை தயவு செய்து பதியுங்கள்.

மீண்டும் சந்திப்போமா? நன்றி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

ரகசியம் பேசலாமா?



கடைவீதியில் நடந்து வந்துகொண்டிருந்தார் சாக்ரடீஸ். எதிரில் தென்பட்ட ஒருவர், ''உங்கள் நண்பனைப் பற்றி ஒரு ரகசியம் சொல்லட்டுமா?'' என்றார்.

உடனே சாக்ரடீஸ், ''நீங்கள், என்னிடம் சொல்லப் போவது உண்மைதானா!'' என்றார் சாக்ரடீஸ்.
...
''தெரியவில்லை... கேள்விப்பட்ட தகவல்!'' என்றார் அவர்.

''அது நல்ல விஷயமா?''

''இல்லை. எதிர்மறையானதுதான்''

''அந்த ரகசியத்தை கேட்பதால் ஏதேனும் பலன் உண்டா?''

''கிடையாது''

இதைக்கேட்ட சாக்ரடீஸ், ''நீ சொல்லும் ரகசியம் உண்மையல்ல; நல்ல விஷயமும் அல்ல; அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. எனவே, நீ அதை என்னிடத்தில் சொல்ல வேண்டியதே இல்லை'' என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

Monday, January 21, 2013

படித்ததில் பிடித்தது: புகழ்

புகழ் என்பது அடங்காப்பசி கொண்ட அதிசய பிசாசு!

- வெ. இறையன்பு

வாழும் காலத்தில் வையப்பட்டவர்தான் ஷேக்ஸ்பியர். 'மயிலிறகு போர்த்திய காகம்' என அவரை வசைமாரிப் பொழிந்தார் தாமஸ் கிரீன். ஆனால் காலம், ஷேக்ஸ்பியரை பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.
...
எப்போதும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள், அடுத்தவரது மதிப்பீட்டினால் தங்களைத் தரம் நிர்ணயித்துக் கொள்வதில்லை. நமது வீட்டிலேயேகூட, நமது பங்களிப்பை உணராமல் இருப்பர். அதற்காக வருந்தவேண்டிய அவசியம் இல்லை. நமது தியாகத்தை அவர்கள் உணரவில்லையே என நினைத்தாலே, நமது மகிழ்ச்சி பறிபோய்விடும். யாருக்காகப் பணியாற்றுகிறோமோ அவர்களின் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி என எண்ணும்போது, எல்லா நிமிடமும் இனிப்பு மயமாகிறது.

முதலில், அடுத்தவருக்குச் சேரவேண்டிய அங்கீகாரத்தை நாம் அளிக்கிறோமா என்பதை உற்றுப்பார்க்க வேண்டும். யாரு டனும் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லை என எண்ணினால், நாம் புகழை யாசிக்கமாட்டோம்.!
 
புகழ் என்பது அடங்காப்பசி கொண்ட அதிசய பிசாசு!

- வெ. இறையன்பு

வாழும் காலத்தில் வையப்பட்டவர்தான் ஷேக்ஸ்பியர். 'மயிலிறகு போர்த்திய காகம்' என அவரை வசைமாரிப் பொழிந்தார் தாமஸ் கிரீன். ஆனால் காலம், ஷேக்ஸ்பியரை பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.

எப்போதும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள், அடுத்தவரது மதிப்பீட்டினால் தங்களைத் தரம் நிர்ணயித்துக் கொள்வதில்லை. நமது வீட்டிலேயேகூட, நமது பங்களிப்பை உணராமல் இருப்பர். அதற்காக வருந்தவேண்டிய அவசியம் இல்லை. நமது தியாகத்தை அவர்கள் உணரவில்லையே என நினைத்தாலே, நமது மகிழ்ச்சி பறிபோய்விடும். யாருக்காகப் பணியாற்றுகிறோமோ அவர்களின் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி என எண்ணும்போது, எல்லா நிமிடமும் இனிப்பு மயமாகிறது.

முதலில், அடுத்தவருக்குச் சேரவேண்டிய அங்கீகாரத்தை நாம் அளிக்கிறோமா என்பதை உற்றுப்பார்க்க வேண்டும். யாரு டனும் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லை என எண்ணினால், நாம் புகழை யாசிக்கமாட்டோம்.!

( 'எல்லோரும் இன்புற்றிருக்க' - சக்தி விகடன் 2011 )

படித்ததில் பிடித்தது: விகடன்

‎''இயற்கையை வெல்ல முயற்சிக்கும் மனிதனால் வெல்லவே முடியாதது எது?''

''மரணம்!

சீனத்தில் ஒரு கதை உண்டு. சாவே அடையாமல் சிரஞ்சீவியாக வாழ நினைத்த சீன அரசர், அதற்காக வித விதமான மருந்துகள், லேகியங்களை சாப்பிட்டாராம். இதற்காகவே, அரண்மனையில் நான்கு மருத்துவர்களையும் வைத்து இருந்தாராம்.
...
ஒருநாள் அரசர் குடிக்க வைத்து இருந்த மருந்தை அமைச்சர் ஒருவர் எடுத்துக் குடித்துவிட்டார். கோபப்பட்ட மன்னர், அவருக்கு மரணதண்டனை அளிக்க உத்தரவிட்டார்.

அவரின் தலையை வெட்ட வீரர்கள் கத்தியை ஓங்கியபோது, அந்த அமைச்சர் மன்னரிடம் கூறினாராம், " நீங்கள் மரணம் அடையாமல் சிரஞ்சீவியாக வாழ்வதற்காகத் தயார் செய்த மருந்து இது. இதை நான் குடித்ததற்காக என்னைக் கொல்ல ஆணையிட்டுவிட்டீர்கள். ஒருவேளை இவர்கள் வெட்டி நான் இறந்துவிட்டால், இந்த மருந்து பயனற்றது என்று எல்லோருக்கும் தெரிந்துவிடும். அப்படியானால், நீங்கள் பயனற்ற மருந்துகளைத்தான் அருந்துகிறீர்கள் என்பதும் தெரிந்துவிடும்" என்றார். சுதாரித்த மன்னர் அவரை விடுவிக்கச் சொல்லி ஆணையிட்டார்.

மனிதனுக்கு அறிவு வளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் இருந்து மனிதனின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று மரணத்தை வெல்வது. ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாமல், தங்களால் இயன்ற சாதனைகளைச் செய்பவர்கள், எந்த அதிசய மருந்துகளையும் உட்கொள்ளாமல் மரணத்துக்குப் பிறகும் மற்றவர்களின் மனதில் வாழ்கிறார்கள்!''

- ராமலட்சுமி, ராஜபாளையம்.
( நானே கேள்வி நானே பதில் - விகடன் 2011 )

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?


  இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவ...ே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம். அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது. மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

* காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.

* அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

* இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.


* நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

* இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்

. * இரவில் கார்போஹைட்ரேட் கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனல் அவை இரவில் ஜீரணமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம். வேறு ஏதாவது வழிகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள.
 
(Thanks to Tamil kalam)

Sunday, January 20, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா? திரை விமர்சனம்


அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம். நலம்தானே? என்ன பால் பொங்கி விட்டதா? :).

மீண்டும் பொங்கல் தினத்தன்று வெளியான படங்களைப் பற்றிய ஒரு சிறப்பு பார்வையில் உங்களை சந்திக்கிறேன். படம் வருவதற்க்கு முன்பே பெரும் எதிர்ப்பார்ப்பிற்க்கு உள்ளாகி இருந்த ஒரு படம். ஓ கண்டு பிடிச்சிட்டீங்களா? சரி படம் எப்படி இருக்குன்னு பாக்கலாம் வாங்க.
முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம். இது நாட்டிற்க்கு ரொம்ப தேவையான முக்கிய பிரச்சினைகளைப் பற்றிய படமோ அல்லது கருத்து படமோ இல்லைங்க. முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்ட படம். இதில் மூன்று கதா நாயகர்களும், அவர்கள் சுற்றி வருவதற்க்கு ஒரு கதாநாயகியும், முக்கியமான நிறய கதாபாத்திரங்களும் உண்டு.

கலியபெருமாள்(சந்தானம்) செல்லப் பெயர் கேகே(கல்யாணம் முதல் கருமாந்திரம் வரை) :), பவர் குமார்(சீனிவாசன்), சிவா(சேது) இவர்கள் மூவரும் நண்பர்கள். பெண்கள் என்றால் அவ்வளவு உயிர்(அப்படி ஒரு ஜொள்ளூ). சிவாவின் வீட்டிற்க்கு அருகே உள்ள வீட்டிற்க்கு சௌமியா(விஷாகா) குடி வருகிறார். சௌமியாவைப் பார்த்ததும், மூன்று பேரும் காதலில் விழுகிறார்கள். இதனால் நண்பர்களுக்குள் போட்டியும், சண்டையும் வருகிறது. பின்பு சமாதானமாகி ஒரு முடிவிற்க்கு வருகிறார்கள். மூன்று பேரும் முயற்ச்சி செய்வோம். சௌமியா யாரை விரும்புகிறாறோ மற்றவர்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்று.

சௌமியாவின் மனதைக் கவர இவர்கள் எடுக்கும் முயற்சியே கண்ணா லட்டு தின்ன ஆசையா?.

இந்த படம் இன்று போய் நாளை வா என்ற கே. பாக்கியராஜ் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன வித்தியாசம் என்றால் பழைய மதுவை புது கோப்பையில் ஊற்றிக் கொடுத்திருக்கிறார்கள். சந்தானம் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.திரு மணிகண்டன் அவர்கள் இயக்கி இருக்கிறார்கள்.
பவர் வரும் இடங்களில் நம்மையும் அறியாமல் சிரிப்பு வருகிறது. சௌமியா மனதைக் கவர அவர் தந்தையிடம் நடனம் பயில வரும் பவர். அவர் சித்தப்பாவிடம் பாடல் பயில வரும் கேகே, சித்தியிடம் வீட்டு வேலை செய்யும் சிவா. இந்த இடங்களை சுற்றி கதை நகர்கிறது. சில இடங்கள் ரசிக்க வைத்தாலும், பல இடங்கள் நம்மை நெளிய வைக்கின்றன. உதாரணத்திற்க்கு இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் வயதானவர்களை அவன் , இவன் என்று சொல்லி சந்தானம் கலாய்ப்பது முகம் சுழிக்க வைக்கின்றது. கொஞ்சம் தவிர்த்து இன்னும் கொஞ்சம் நன்றாக நகைச்சுவையை சேர்த்திருக்கலாம்.
நிறய திறமையான கலைஞ்ஞர்களை வீணடித்து விட்டார்கள். கோவை சரளா, ராஜா, விடிவி கணேஷ், கணேஷ்கர், தேவதர்ஷினி, சிவசங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்க்க வில்லை. சௌம்யா இன்னும் கூட நடிப்பில் அக்கரை செலுத்த வேண்டுமோ? நிறய விளப்பர படங்களில் பார்த்து, நமக்கு நெருங்கிய முகமாக தெரிகிறார். கவர்ச்சியை தாரளமாக வழங்கி இருக்கிறார்.

பவரை கலாய்க்கும் இடங்கள் உதாரணத்திற்க்கு நானாவது காமெடியன்னு தெரியும், ஆனா நீ இன்னும் காமெடியன்னு தெரியாமயே இருக்கிற பாரு அதுதான் பெரிய காமேடி என்று சந்தானம் கலாய்ப்பது மிக ரசிப்பு.
சிறப்புத் தோற்றமாக சிம்பு, கவுதம் மேனன் வருகிறார்கள். இசை எஸ் தமன் அவ்வளவாக நெஞ்சில் நிற்க்க வில்லை. லவ் லெட்டர் எழுத ஆசப்பட்டேன் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றது.

தவிர்க்கவே முடியாமல் நிறய இடங்களில் பழைய படம் ஞாபகம் வருகிறது. Old is Gold னு சும்மாவா சொன்னாங்க.


Directed byK. S. Manikandan
Produced bySanthanam
Rama Narayanan
Written bySanthanam
K. S. Manikandan
StarringSanthanam
Srinivasan
Sethu
Vishaka
Music byS. Thaman
CinematographyBalasubramaniem
StudioHand Made Films
Sri Thenandal Films
Distributed byRed Giant Movies


கண்ணா லட்டு தின்ன ஆசையா? சர்க்கரைக் குறைவு :)
இன்னும் கொஞ்சம் சர்க்கரையை(நகைச்சுவையை) சேர்த்திருக்கலாம்.
மீண்டும் சந்திப்போமா? வாழ்க வளமுடன்