Sunday, June 21, 2015

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

இது எப்படி ஏற்படுகிறது?







நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.


நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

தலைவலி :


நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.


படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!


அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :


ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.


மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.


மலச்சிக்கல் :


மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.


படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.


உயர் ரத்த அழுத்தம் :


உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.


காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

Tuesday, June 16, 2015

உடல் எடை குறைக்க சூப்பர் டிரிக்ஸ்!



குறைந்த கலோரி - நிறைந்த உணவு

கலோரிகள் இல்லாத, நிறைவான உணவைச் சாப்பிடலாம். வாழைத்தண்டு, புடலங்காய், பீர்கங்காய், பீன்ஸ், அவரைக்காய், பூசணி, கோவைக்காய், கீரைகள், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் எப்போதும் கலோரிகள் குறைவாகவே இருக்கும். இதை அதிக அளவில் சாப்பிட்டாலும்கூட உடல் எடை அதிகரிக்காது. அதிக நார்ச்சத்தும்கூட கொழுப்பைக் கரைக்க உதவும்.

கடைசியில்தான் அரிசி சோறு

முதலில் சாலட், அடுத்து கீரை, அதற்குப் பிறகே அரிசி சோறும் குழம்பும் சாப்பிடலாம். வெறும் குழம்புக்கு மட்டும் சாதத்தைச் சாப்பிடாமல், சிறிதளவு ரசம், மோர் எனப் பிரித்துச் சாப்பிட வெரைட்டியாகச் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். சமச்சீரான உணவையும் சாப்பிட முடியும். எப்போதுமே, கிரேவியை முதலில் சாப்பிடக் கூடாது. கிரேவியின் ருசியால் நாம் அதிக அளவு உணவைச் சாப்பிடும்படி தூண்டுதல் ஏற்படும்.

நொறுக்குத்தீனி மோகம்
வீட்டில் இருக்கும்போது, எதையாவது எடுத்துச் சாப்பிட நாக்கு தூண்டும். அப்போது, வெள்ளரி விதைகள், உலர் பழங்கள், கொட்டைகள் சாப்பிடலாம். சிப்ஸ், பிஸ்கட், கேக் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். ஒருவேளை ஆசைக்காக சாக்லெட், பிஸ்கட் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும், அதற்குப் பின் வாயை நன்றாகக் கொப்பளித்துவிட வேண்டும். இதனால், மீண்டும் மீண்டும் பிஸ்கட், சாக்லெட் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு குறைந்துவிடும். ஐஸ்கிரீம் சாப்பிட நினைத்தால், அதற்குப் பதிலாகப் பழங்களால் ஆன ஸ்மூத்தியை ஃப்ரீசரில் வைத்து, ‘ஐஸ்கிரீம்’ போல சாப்பிடலாம்.

நீல நிறம் பார்த்தல்
பொதுவாக ஹோட்டல், டைனிங் ஹாலில் நீல நிறத்தை பெயின்ட் அடிக்க மாட்டார்கள். ஏனெனில், நீல நிறம் பசியைக் குறைக்கும். கலர் தெரப்பியில், நீல நிறத்தைப் பசியைக் குறைப்பது (Appetite suppressant) என்று சொல்வர்கள். அதனால், குறைவாகச் சாப்பிட நினைப்பவர்கள் நீல நிற மேசை விரிப்பில் வைத்தும், நீல நிறக் கைக்குட்டையை அருகில் வைத்தும் சாப்பிடலாம். ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் பசியை அதிகப்படுத்தும் என்பதால், உண்ணும் நேரங்களில் இந்த நிறங்களைப் பார்பதைத் தவிர்க்கலாம்.

கண்ணால் சுவைத்தல்
நமக்குப் பிடித்த உணவை, சாப்பிட்டு ருசி பார்ப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, பிறகு உணவைச் சாப்பிட்டால், சாப்பிடும் உணவின் அளவு குறைந்துவிடும். திருப்தி முன்னரே வந்துவிட்டதால் அதிகமாகச் சாப்பிடத் தோன்றாது. அதுபோல், வெள்ளைத் தட்டில் சாப்பிட்டால், உணவு அதிகமாக இருப்பது போல கண்களுக்குத் தோன்றும். மேலும், வெள்ளைத் தட்டு சின்னதாக இருந்து, தட்டு முழுவதும் உணவைப் பரப்பி சாப்பிடுவதாலும், நிறைய சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். உணவைச் சாப்பிடத் தொடங்கும்போது, முதலில் முகர்ந்து, பின் ரசித்து, ருசித்துச் சாப்பிட வேண்டும்.

பழைய தோற்றத்தை நினைவுபடுத்துதல்
நாம் ஸ்லிம்மாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை மொபைல் ஸ்கீரீன் சேவர், வால் பேப்பர், டெஸ்க் டாப் வால் பேப்பர், வாலட் போன்ற அடிக்கடி நாம் பார்க்கும் இடங்களில் வைக்கலாம். இதனால், மீண்டும் ஸ்லிம்மாக மாறவேண்டும் என்ற உந்துதல் நமக்கு ஏற்படும். பீரோவில்கூட நம்முடைய அளவில் ஒரு சைஸ் சிறிய அளவிலான ஒரு டிரஸ்ஸை வாங்கிவைத்து அது நமக்குச் சரியாகப் பொருந்துகிற அளவுக்கு நம் எடை குறைய வேண்டும் என்ற நோக்கத்தை மனதில் உருவாக்கிக்கொள்ளலாம்.

உடற்பயிற்சி

தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப் பயிற்சிகளையும் செய்யலாம். தனியாகப் பயிற்சி செய்ய மனம் இல்லை எனில், வீட்டில் இருப்பவர்கள், அருகில் வசிப்பவர்களுடன் சேர்ந்து பயிற்சிகள் செய்யலாம். இதனால், உடற்பயிற்சி செய்ய ஆர்வம் அதிகரிக்கும். உடலும் ஆரோக்கியம் பெறும். ஒருநாளைக்கு மூன்று முறை சாப்பிடுதல், இரண்டு முறை குளித்தல் போன்ற கட்டளைகளோடு ஒருவேளை உடற்பயிற்சி என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நன்றி டாக்டர் விகடன்


35 Ways to Respect your Children's views

35 Ways to Respect your children's views and ways to know them in a better way. Must read

1. Put away your phone in their presence.

2. Pay attention to what they are saying.

3. Accept their opinions.

4. Engage in their conversations.

5. Look at them with respect.

6. Always praise them.

7. Share good news with them.

8. Avoid sharing bad news with them.

9. Speak well of their friends and loved ones to them.

10. Keep in remembrance the good things they did.

11. If they repeat a story, listen like it's the first time they tell it.

12. Don't bring up painful memories from the past.

13. Avoid side conversations in their presence.

14. Sit respectfully around them.

15. Don't belittle/criticize their opinions and thoughts.

16. Avoid cutting them off when they speak.

17. Respect their age.

19. Accept their advice and direction.

20. Give them the power of leadership when they are present.

21. Avoid raising your voice at them.

22. Avoid walking in front or ahead of them.

23. Avoid eating before them.

24. Avoid glaring at them.

25. Fill them with ur appreciation even when they don't think they deserve it.

26. Avoid putting your feet up in front of them or sitting with your back to them.

27. Don't speak ill of them to the point where others speak ill of them too.

28. Keep them in prayers always possible.

29. Avoid seeming bored or tired of them in their presence.

30. Avoid laughing at their faults/mistakes.

31. Do a task before they ask you to.

33. Choose your words carefully when speaking with them.

34. Call them by names they like.

35. Make them your priority above anything.

Children are parents treasure and their most precious gift on this land. They must have seen the world lesser than you but they see it in a different way which you need to appreciate. Listen to them and try giving them as much time as you can. These moments are more precious than anything in this world