Thursday, March 08, 2012

காலம் யார் கையில்?



* அறிஞர்களை வெற்றிகொள்ள, அறிவீனர்களுடன் வாதம் புரிய, தன்னைச் சுற்றி கூட்டம் சேர்க்க.. இந்நோக்கங்களுக்காக கல்வி கற்பவர்கள் சுவனத்தில் (சொர்க்கத்தில்) அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* இறைவனே உங்களுக்காக நட்சத்திரங்களைப் படைத்தான். அவற்றின் மூலம் தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழி தெரிந்து கொள்வதற்காக!
* இறைவன் கூறுகிறான்: காலத்தை திட்டாதீர்கள். காலத்தைத் திட்டுபவன் என்னை துன்பத்திற்கு உள்ளாக்குகின்றான். (ஏனெனில்) காலம் என் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. நானே இரவை பகலாக ஆக்குகின்றேன்.
* காலத்தைக் கணிப்பதற்கும், வெளிச்சத்தைத் தருவதற்கும் தான் சூரியனும், சந்திரனும் படைக்கப்பட்டனவே தவிர, அவற்றின் சுழற்சியைக் கொண்டு நன்மை தீமையைக் கணிப்பதற்கு அல்ல.
* பறவைகளைப் பறக்கவிட்டு அதனால் சகுனம் பார்ப்பது, கல்லெறிந்து குறிகேட்பது ஆகியவை இறைவனன்றி மற்றவற்றை வணங்குவதற்கு இணையான செயலாகும்.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

தெய்வத்தன்மையை இழக்காதீர்

* தெய்வீகம் எப்போதும் மனிதனிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை விழிப்படையச் செய்து எழுந்திருக்கச் செய்யுங்கள்.
* ஒவ்வொரு கடமையும் புனிதமானது தான். கடமையில் பக்தியுடன் இருப்பது தெய்வ வழிபாட்டில் மிக உயர்ந்த முறையாகும்.
* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, பிறர் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கு உதவி செய்வதே.
* இன்னல்கள் அனைத்துக்கும் நடுவிலும், நமது தெய்வத்தன்மையை இழக்காமல் இருக்க வேண்டும்.
* கோயிலாலோ, விக்ரகத்தின் அழகாலோ இறைவன் மகிமை பெற்றான் என்பதில்லை. கடவுளால் தான் அவற்றுக்குப் பெருமை.
* பணத்திற்காக, உடல்நலத்திற்காக, சொர்க்கத்திற்காக, ஞானத்திற்காக அல்லாமல் மன சுத்தத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பிற பிரார்த்தனைகள் அனைத்தும் சுயநலம் தான்.
- விவேகானந்தர்

வினாடியைக் கூட வீணாக்காதே

கடமைகளைச் செய்யாமல் வீணே காலம் கழிக்கும்போது, நேரம் உன் கரங்களில் கனக்கிறது. உனக்கென கொடுக்கப்பட்ட வாழ்நாட்களில் ஒரு வினாடியைக்கூட வீணாக்கக்கூடாது. இறைவன் காலஸ்வரூபன், நேரம் இறைவனின் உடல்.


தாய் குழந்தைக்குப் பாலூட்டுவது அவள் கடமை. ஆனால், கடமை என்று நினைத்து அவள் அதைச் செய்வதில்லை. அன்பு மயமாகிப் பாலூட்டுகிறாள். தெய்வநிலைக்கு உயர்கிறாள். அப்படி நமது கடமைகளையும் அன்பு மயமாகிச் செய்யக்கூடுமானால் கடமை சுமையாகத் தெரியாது. அந்தப் பரிபக்குவத்தை எய்தும்போது நாம் கடவுள் தன்மையை எய்தியவர்களாவோம். கடமை உணர்வு வெளியே இருந்து உள்ளுக்குள் பாய்வது. அன்புணர்வு உள்ளேயிருந்து பிரவகிப்பது.


ஆன்மிக வெற்றியை அடைவதற்கு மிகவும் நேரான வழி நிஷ்காம கர்மமேயாகும். செயலின் பலனை நாம் அனுபவிக்க வேண்டும் என்று பற்றுதலில்லாமலும், அக்கறை கொள்ளாமலும் செயலே நிஷ்காமகர்மம் செயலை கடமையாக, அர்ப்பணமாக, வழிபாடாகச் செய்தல் வேண்டும். செயலும் பயனும் வெவ்வேறான வஸ்துக்கள் அல்ல. செயலின் முடிவுநிலை, உச்சகட்டம் முற்றுப்புள்ளி. பலனாகும் மலரே கனி. கனியே மலர். ஒன்று தொடக்கம், மற்றொன்று அதன் தார்மீகமான முடிவு. மலரே பழமாகிறது. செயலே அதன் விளைவுகளாகிறது. செயல் புரிவது ஒருவர் கடமை. நன்றாகச் செயல் புரியுங்கள். கடவுள் பயத்துடன் புரியுங்கள். அன்பினில் தோய்ந்து செயல் புரியுங்கள். மலருக்குப் பிறகு பழம் கனிவதுபோல, செயலை, விளைவுகள் இயல்பாகத் தொடரும். இடைவிடாத நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல் புரியுங்கள். வெற்றி நிச்சயம்.

-Saibaba