Friday, September 11, 2015

திருமந்திரம்!

திருமந்திரம்!

 
நிற்கின்ற போதே நிலையுடையான் கழல்
கற்கின்ற செய்மின்; கழிந்து அனும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின்; தொழுத பின்
மற்றொன்று இலாத மணி விளக்காமே!

கருத்து: கற்பதற்கு உரிய பருவம், இளமைப் பருவம்; இறைவனின் சிறப்பியல்புகளை கூறும் நுால்களைக் கற்பதற்கு உரிய பருவமும் இளமைப் பருவமேயாகும். அவ்வாறு கற்பதால், நம்மைப் பீடித்துள்ள பாவங்கள் நீங்கும். கற்பதோடு நில்லாமல், அக்கண்ணுதலோனை வணங்குங்கள்! அக்கல்வி, இயல்பாகவே என்றும் ஒளிவீசும் மணி விளக்காக நின்று உங்களுக்கு உதவும்.

Tuesday, September 08, 2015