Friday, December 27, 2013

The Lunchbox (தி லன்ச்பாக்ஸ்) திரைவிமர்சனம்

அன்புள்ள நண்பர்களே,

   வணக்கம். நலம்தானே? ஒவ்வொரு முறையும் தமிழ் படத்தின் திரைவிமர்சனத்தை சமர்பித்தேன். இம்முறை என்னை கவர்ந்த ஒரு ஹிந்தி திரைப்படத்தை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன். நமது வாழ்வில் உணவு என்பது இன்றியமையாத ஒரு விஷயம். அதை நாம் அனைவரும் அறிந்ததே. அதே உணவு மிக அன்போடும், அக்கறையோடும் தயாரிக்கப் பட்டு பறிமாறப் பட்டால் எப்படி இருக்கும். மிக சுவையாக இருக்கும். ஆக அந்த அன்பு என்ற ஒன்று ஒவ்வொருவரின் வாழ்விலும் எவ்வளவு முக்கியம் என்று சொல்லும் படம்தாங்க இது வாங்க லன்ச்க்கு போகலாம்... இல்ல படத்துக்கு போகலாம்.

   படத்தோட பேர கண்டு பிடிச்சிட்டிங்கன்னு நினைக்கிறேன். அட ஆமாங்க The Lunchbox (தி லன்ச்பாக்ஸ்) படத்தைத்தான் நாம இப்ப பார்க்கப் போறோம்.

 இந்த படம் முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் ஒரு நிகழ்வ்வு. அதுவும் டப்பாவாலா என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இளா என்கிற குடும்பத் தலைவி தன் கணவனுக்காக தினமும் லன்ச் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் அது தவறுதலாக வேறொருவருக்கு போகிறது. அந்த நபர் மனைவியை இழந்து தனிமையில் இருப்பவர். அந்த உணவின் சுவையும் மனமும் அவர் மனதையும், நாவையும் கட்டி இழுக்கிறது. தினமும் டப்பா காலியாக வருவது மிகவும் சந்தோசத்தை எழுப்புகிறது இளாவிற்க்கு. அதை கணவனிடம் கேட்கும் பொழுது வேறொரு உணவை சொல்லி நன்றாக இருந்தது என்று கணவன் சொல்கிறார். அதிலிருந்து அவருக்கு தெரிந்து விடுகிறது உணவு வேறு யாரோ உண்ணுகிறார்கள் என்று. இவரின் மேல் வீட்டில் உள்ளவர் தேஷ்பாண்டே என்ற வயதான முதியவள். அவளிடம் கேட்டு கேட்டு தினமும் இளா உணவு தயாரிப்பார். அவரிடம் இவர் இந்த விஷயத்தை சொல்ல, அவர் கடிதம் எழுதி டப்பாவில் வைக்க சொல்கிறார். அதன் மூலம் இருவரும் நல்ல நண்பர்களாகிறார்கள். இளாவின் கணவன் இவளிடம் சரியாக பேசுவதுக் கூட கிடையாது.இதை வைத்து இளா கண்டு பிடித்து விடுகிறார் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது. அது அவரின் மனதை மிகவும் பாதித்து தற்கொலை வரைக் கூட முயற்சிக்கிறார் தன் குழந்தையுடன். அந்த நண்பர் சஜன் பெர்னாண்டஸ் , இவருக்கு பல்வேறு யோசனைகளும் கூறுகிறார். நாளடைவில் இவர்களின் முகம் பார்க்காத நட்பு மெல்ல காதலாக உறுவாகிறது. இருவரும் வயது வித்தியாமின்றி அன்பினால் இணைந்தார்களா என்பதே முடிவு.



 மிகவும் குறைந்த கதாபாத்திரங்கள். வலிமையான கதை அதில் ஆழமான பெண் மற்றும் ஆணின் உணர்வுகளை வெளிப்படுத்திய இயக்குநர் ரித்தேஷ் பாட்ரா(Ritesh Batra) அவர்களுக்கு பாராட்டுக்கள். மிகவும் அமைதியாக நகர்கிறது கதை. ஒரு டப்பா எங்கெங்கோ சுற்றி எப்படி ஒரு இடத்தை அடைகிறது என்பது மிகவும் ஆச்சர்யம் கலந்த உண்மை. சின்ன சின்ன கதாபாத்திரமும் நமக்கு நல்ல விஷயத்தை சொல்கிறது.

பெர்னாண்டஸ் ஆகா இர்பான் கான் அமைதியும் அழுத்தமுமாக மிக நன்றாக நடித்திருக்கிறார். இளாவாக நிம்ரட் எதிர்பார்ப்போடு சமைப்பதாகட்டும், கணவனின் வருகைக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டு காத்திருந்து ஏமார்வதாகட்டும் மிக அழகு+எதார்த்தம். அவரின் விதவிதமான் சமையல் நாவில் நீர் ஊறவைத்து விட்டது.

 பெண் என்பவள் பாத்திரம் கழுவி, சமைப்பதற்க்கு மட்டும் அல்ல. அவள் எண்ணமும், சிந்தனையும் கொண்டவள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கொண்டவள் என்பதை நம் நாட்டில் எத்தனைப் கணவன் புரிந்து வைத்திருக்கிறார்களோ தெரியாது. ஆனால் இந்த படத்திற்க்கு பிறகு ஒரு சிலர் மனதாவது மாறும் என்று நம்புவோம்.

மொத்தத்தில் லன்ச்பாக்ஸ் , என்றென்றும் கெடாததும் + நாவில் நீர் ஊறவைப்பதும்.

மீண்டும் இதேப்போல் ஒரு திரைவிமர்சனத்தோடு சந்திப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழமைகளே!!

வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!


Friday, December 13, 2013

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்:

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்:

வெட்கம் :- ( Shyness )

ஒரு தொழிலை செய்யும்பொழு
செய்யும்பொழுதோ அதனை நம்ம
செய்ய முடியுமா ,
அதற்கு நமக்கு தகுதி இருக்கா ,அல்லது
தொல்விடைந்தால்
மற்றவர்கள்
கேலி செய்வார்களே என்று வெட்பட்டால்
முன்னேறமுடியாது.

பயம் :- Fear

இதனை நம்மால் செய்ய
முடியுமா ,அதாவது இந்த
செயலை
நம்மால் செய்ய முடியுமா என
பயப்படுவது.

தாழ்வுமனப்பான்மை Poorself-
image )
என்று,
அவங்களுக்கு தைரியம்
இருக்கு எனக்கு இல்லை ,அவர்கள
அதற்கான
தகுதி இருக்கு நமக்கு இல்லை என்று
நம்மை நாமே
தாழ்த்திக்கொள்ளல்

நாளையவாதி :-(Procrastination )
எந்த செயலையும்
நாளை நாளை என
தள்ளிப்போட்டுக்கொண்டே
செல்லுதல் .

சோம்பல் :- ( Lazyness )

சோம்பல் பட்டுக்கொண்டு எந்த
செயலையும் செய்யாமல்
இருப்பது

பிற்போக்கு பழக்க வழக்கம் :-
( Negative Habits )

பிற்போக்கான எண்ணங்கள்
பிற்போக்கு செயல்கள்
ஆகியவற்றால் பிற்போக்கு பழக்க
வழக்கங்கள்

மூடநம்பிக்கை :- (Superstition)

கை ரேகை பார்த்து வாழ்வதை விட
கைரேகை தேய
உழைப்பவனே சிறந்தவன்
நமது வெற்றிக்கு தடையாக
இருக்கும் மூட
நம்பிக்கை ,சம்பிரதாயங்கள் ,பழக்க
வழக்கங்கள்
ஆகியவற்றை தூக்கி எறிய
வேண்டும்.

(Thanks to ரிலாக்ஸ் ப்ளீஸ்)

அவதார் சம்பவம் வேறெங்கும் இல்லை இந்தியாவில் தான்!!!

அவதார் சம்பவம் வேறெங்கும் இல்லை இந்தியாவில் தான்!!!

"ஜேம்ஸ் கமரூன்" எடுத்து உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற "அவதார்" படம் போல ஒரு சம்பவம் இங்கே நம் இந்தியாவில்தான் நடக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை.

காட்டில் கிடைக்கும் ஒரு உலோகத்ததுக்காக ஒரு பழங்குடி மக்களை துன்புறுத்தி, அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த இடத்தை விட்டு அடித்து விரட்டி, அந்த உலோகத்தை கைப்பற்ற நடக்கும் போராட்டமே இந்த படத்தின் கதை.

இதே போல் "ஒரிஸ்ஸா" மாநிலத்தில் "நியம்கிரி" என்ற மலையில் அலுமினிய தாதுவான "பாக்ஸ்சைட்" நிரந்த மலை ஒன்று இருப்பதாக கண்டறிந்துள்ளனர். ஒரு தனி மலையில் உள்ள பாறைகள் அனைத்திலும் இந்த தாதுக்கள் நிரந்து உள்ளதென இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இதை எடுக்க அலையை அலைந்துகொண்டுள்ளது.

ஆனால் இந்த மலையில் பூர்வீகமாக வசிக்கும் "டான்க்ரியா க்ஹோந்த்" இனத்தை செந்த பழங்குடி மக்கள் அந்த மலையை தங்கள் குல தெய்வமாக வழிப்பட்டு வருகிறார்கள். காலம் காலமாக தங்கள் தெய்வமாக வழிபடும் இந்த மலை தாதுக்காக வெட்டி வீழ்த்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

ஆனால் அந்த இங்கிலாந்து கம்பனியோ அந்த மலையை கைப்பற்றுவதற்க்காக இந்த மக்கள் வசிக்கும் குடிசைகள் மீது இயந்திரங்கள் கொண்டு இடித்து அவர்களை அந்த இடத்தை விட்டு போகுமாறு துன்புறுத்தப்படுகிறார்கள். இதை பற்றி ஒரு சமூக நல அமைப்பு ஒன்று ஒரு குறும்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது.

http://www.youtube.com/watch?v=R4tuTFZ3wXQ

நமது அரசாங்கமோ இதை பற்றி வாய் திறப்பதாக தெரியவில்லை , ஊடங்கங்களும் இதை பெரிதுபடுத்த முன் வரவில்லை. இதை பற்றி "டைம்ஸ்" இணையதளம் ஒரு விரிவான கட்டுரை எழுதி உள்ளது அந்த கட்டுரையை படிக்க இந்த சுட்டியை அழுத்தவும்.

http://content.time.com/time/world/article/0,8599,1964063,00.html

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சிந்தனை துளிகள்....


01. எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.
02. அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?
03. அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.
04. ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.
05. கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.
06. கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.
07. A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z
அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.
08. ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.
09. மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.
10. ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.
11. தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள்.
12. காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.
13. உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.
14. சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.
15. கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.
16. நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.
17. சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.
18. உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.
19. கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.
20. வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.
21. உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.
22. நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.
23. நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.
24. எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.

(Thanks to Tamil karuthukalam)

நமது பாரம்பரிய உணவு

நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களை கைவிட்டு அரிசி சோற்றின் மீது நம் சமூகம் தன் கவனத்தை திருப்பியது. இந்தியாவில் 57 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மை காரணமாக, சராசரி எடையை விட குறைவான எடையுடன் பிறக்கின்றன. நம் நாட்டில் மொத்த உணவு உற்பத்தியைப் பற்றி அதிகமாகப் பேசப்படும் வேளையில், கடந்த 1991-ம் ஆண்டு தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்னால், இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்து வந்த உணவு,அதற்கு முன் இருந்ததை விட 2001-ம் ஆண்டில் 150 கிலோவாகக் குறைந்துவிட்டது. இப்படி உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதற்கு, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குக் கொடுத்துவிட்டு வெளியேறி வருவது ஒரு காரணம்.

1965க்கு முன் அன்றாட வாழ்வில் கம்மங்கூழும், கேப்பைக் கழியும் நீக்கமற நிறைந்திருந்தன, காலையில் வடிகஞ்சி, பின்னர் வயல் வேலை அப்புறம் கம்மங்கூழ் என்று ஓடியது தினசரி வாழ்வு.

பின்னர் தட்டில் அரிசி என்பது ஒரு கௌரவம் என்ற கருத்துருவாக்கம் நிகழ்ந்தது. இப்படியாக ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவிற்கு தமிழன் கொஞ்சம் கொஞ்சமாக மறுப்பு சொன்னான் .
இது வாய்வு, மலச்சிக்கல், இரத்த அழுத்தம் சர்க்கரை என, பல வியாதிகளை உருவாக்கியது.

நாம் சிறு தானியங்களை நோக்கி நம் கவனத்தை திருப்பினால் அதற்கான சந்தை ஒன்று தானே உருவாகும். சிறுதானியங்கள் தண்ணீர் அதிகம் கேட்டகாத மானாவாரி பயிர்கள் என்பது ஒரு கூடுதல் பலம். நமது பாரம்பரிய சிறு தானியங்களின் ஒரு கிலோ உற்பத்திக்கு சொற்ப தண்ணீர் போதுமானது.

அன்னம் எப்படியோ எண்ணம் அப்படியே,உணவின் தூய்மை உணர்ந்து வாழ்வை எளிமையாக்கும் உன்னத பாதை சிறு தானிய உணவு முறைகளில் பொதிந்துள்ளது

- கோ.நம்மாழ்வார்
குக்கூ குழந்தைகள் வெளி பக்கத்திலிருந்து

குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை - கேள்விகளும், பதில்களும்

Dear Friends

குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை - கேள்விகளும், பதில்களும்

குழந்தை வளர்ப்பு தொடர்பான குழப்பங்கள் பல பெற்றோர்களை வாட்டி வதைப்பதாய் உள்ளன. தங்களின் பங்களிப்பை சரியாகத்தான் செய்கிறோமா, தங்களின் குழந்தைகளுக்கு உண்மையில் தேவையானது எது? என்பவை குறித்த சந்தேகங்கள் பல பெற்றோர்களுக்கு உண்டு.

குழந்தை வளர்ப்பில் தெளிவான சிந்தனையற்ற பெற்றோர்களால், பல குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், குழந்தைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் பல பெற்றோர்களும் திணறுகிறார்கள்.

எனவே, குழந்தை வளர்ப்பு பற்றிய சில சந்தேகங்களுக்கு, நிபுணர்களின் பதில்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

நான் என் மகளுக்கு வேண்டாததை செய்கிறேன் என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். அவள் மகிழ்ச்சிக்காக அதேசமயம், என் சக்திக்கு உட்பட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்த முடிந்ததை செய்கிறேன். அவள் அழுவதை என்னால் தாங்க முடியாது.

குழந்தைக்கு வேண்டாததை செய்வது போன்றதல்ல, குழந்தையை நேசிப்பது. கட்டிப்பிடித்து கொஞ்சுவது, அன்பு செலுத்துவது, அவளுடன் நேரம் செலவழிப்பது, வீட்டுப்பாடம் செய்வதிலும், பாடத்தை படிப்பதிலும் உதவி புரிவது, சிறந்த செயல்களை மனதார பாராட்டுவது மற்றும் பரிசளிப்பபது போன்றவை ஏற்கக்கூடியவை மற்றும் தேவையானவையும்கூட.

அதேசமயம், கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தல், மனம்போன போக்கில் போகவிடுதல் உள்ளிட்டவை தவறு. உங்கள் மகளால், அவளுக்கென்று அவளே செய்துகொள்ளக்கூடிய விஷயங்களைக்கூட, நீங்களே செய்துகொடுப்பது கூடாது.

புத்தகப் பையை சரிசெய்து எடுத்து வைப்பது, தேவையான பென்சில், பேனா மற்றும் இதர பொருட்களை எடுத்து வைப்பது, பென்சில் சீவுதல் மற்றும் பேனாவிற்கு மை ஊற்றுதல் உள்ளிட்ட விஷயங்களை நீங்களே செய்வது மற்றும் குழந்தையை அதிகமான நேரம் டி.வி பார்க்க அனுமதிப்பது மற்றும் வீட்டுப்பாடத்தை நீங்களே செய்வது உள்ளிட்டவை தவறான ஒன்றாகும்.

உடலுக்கு தீங்குதரும் பொருட்களை, கேட்கிறாளே என்பதற்கான அளவுக்கு அதிகமாக வாங்கித் தருவது தவறு. எனவே, மேற்கூறிய விஷயங்களை தெளிவாகப் புரிந்துகொண்டால், உங்கள் குழந்தைக்கு வேண்டாததை செய்கிறோமா, இல்லையா? என்ற தெளிவு பிறக்கும்.

நான் குழந்தை பருவத்தில் பல சிரமங்களை சந்தித்தேன். ஆனால், அந்த கஷ்டங்களை என் குழந்தை படக்கூடாது என்று நினைப்பதோடு, அவனுக்கு ஒரு சிறந்த தகப்பனாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். அவனுக்கு வேண்டிய அனைத்தையும் செய்கிறேன் மற்றும் கேட்பதையெல்லாம் வாங்கியும் தருகிறேன். நான் செய்வது சரியா?

இதுபோன்ற கேள்விகள் பல பெற்றோர்களாலும் கேட்கப்படுவதுதான். பொதுவாக, ஒவ்வொரு குழந்தையும் தங்களுக்கான சொந்த விருப்பங்களுடனேயே பிறக்கின்றன என்பது ஒரு அறிவியல் உண்மை. ஒரு குழந்தை புரண்டு படுப்பது, தவழ்ந்து செல்வது, எழுந்து உட்காருவது மற்றும் எழுந்து நடப்பது உள்ளிட்ட குழந்தையின் உடல்ரீதியான செயல்பாடுகள் நாம் அறிந்ததே.

குழந்தைகள், தங்களுக்கான ஒரு சமூக உளவியலைக் கொண்டிருப்பார்கள். உங்களின் மகன், குழந்தையாக இருக்கும்போது, அவனுக்கு தேவையான அனைத்து வேலைகளையுமே நீங்கள் செய்திருப்பீர்கள். ஆனால், குழந்தை வளர வளர, அவர்கள் தங்களுக்கான தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.

உதாரணமாக, உங்கள் மகன் 2 வயதில் இருக்கையில், அவன் பல விஷயங்களை நான் செய்கிறேன், நான் செய்கிறேன் என்று அடிக்கடி சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவன் தனது சுயத்தை வெளிப்படுத்த விரும்புவதன் வெளிப்பாடுதான் இது. நிலைமை இப்படியிருக்கையில், நீங்கள் உங்கள் மகனின் மேல் வைத்திருக்கும் அபரிமித அன்பால், அவனுக்கான அனைத்தையுமே செய்ய எப்போதுமே முயலும்போது, அவனின் சுதந்திர செயல்பாடுகளில் நீங்கள் குறுக்கிடுகிறீர்கள் மற்றும் அவனின் திறன் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறீர்கள்.

குழந்தையின் தன்னம்பிக்கை, திறன் மற்றும் சுய சிந்தனை உள்ளிட்ட விஷயங்கள் மேம்பட வேண்டுமெனில், நீங்கள் அனைத்திலும் தலையிடுவதை நிறுத்த வேண்டும். உங்கள் மகனுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்யாமல், மாறாக, தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் மட்டுமே செய்யவும்.

இங்கே ஒரு பழமொழியை யோசித்துப் பார்ப்பது நல்லது. அதவாது "பசியோடு இருக்கும் ஒருவனுக்கு நீங்கள் பிடித்த மீன்களில் சில துண்டுகளை கொடுப்பதற்கு பதிலாக, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது" என்பதே அது.

நானும், எனது மனைவியும் ஒரு குழந்தை மட்டும் போதுமானது என்று நினைக்கிறோம். அப்போதுதான், அந்த குழந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்து, அதன் மேம்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அதற்கு சிறப்பான வழிகாட்டுதல்களை கொடுக்க முடியும் என்று நினைக்கிறோம். ஆனால், என் மாமனாரும், மாமியாரும், இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில், ஒரு குழந்தை என்றால் அதிக செல்லம் கொடுத்து, அது கெடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். உங்களின் கருத்து என்ன?

இதுபோன்ற குழப்பங்கள் பலருக்கும் இருக்கின்றன. உங்களின் கருத்துப்படி, ஒரே குழந்தையாக இருந்தால், அனைத்து விஷயத்திலும் சிறப்பான கவனம் செலுத்தி, தேவையானதை நன்றாக செய்து கொடுத்து, படிப்பு உள்ளிட்ட விஷயங்களில் சிறப்பாக உதவிசெய்து அதை முன்னேற்றலாம் என்பது ஏற்கக்கூடிய வாதமே.

அதேசமயம், ஒரு குழந்தை என்றால் அதிக செல்லமாகிவிடும் என்ற கருத்தைப் பற்றி சொல்ல வேண்டுமெனில், இதற்கு பெற்றோர்தான் காரணம். சரியான மற்றும் தெளிவான அறிவுடைய பெற்றோர்கள், ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி, 4 குழந்தைகளாக இருந்தாலும் சரி, சிறப்பாகவே அவற்றை வளர்ப்பார்கள்.

பல ஆய்வு முடிவுகள் கூறுவது என்னவெனில், வீட்டில் ஒரே குழந்தைகளாக இருப்பவர்கள், பிற குழந்தைகளைவிட, சமூக குணநலன்கள், பண்புநலன்கள் மற்றும் உணர்ச்சி நிலைகள் ஆகியவற்றில் எந்த வித்தியாசத்தையும் காட்டுவதில்லை என்பதுதான். எனவே, ஒரு குழந்தை பெற்று வளர்த்தாலே சிறப்பாக வளர்ந்துவிடும் என்றோ அல்லது கட்டாயம் அது தடம் மாறிவிடும் என்றோ அறுதியிட்டு கூறிவிட முடியாது. அனைத்தும் நம் கையில்தான் உள்ளது.

எனது மகளுக்கு 9 வயது. அவள் ஒரு வித்தியாசமானவள். தனக்கென்று எதுவும் வேண்டுமென கேட்பதில்லை. அவள் பொருட்களின் மீது ஆசைப்படுபவளாக இல்லை. ஆனால் அவளுக்குத் தேவையான அனைத்தையும் நானே முன்வந்து செய்து கொடுக்கிறேன். பள்ளிக்கு தயார் செய்வதிலிருந்து, உணவு கொடுப்பதிலிருந்து, அவளுக்கு தேவையான உடைகளை குளித்தப் பின்பு எடுத்துக் கொடுப்பதிலிருந்து, அவளின் அறையை சுத்தம் செய்வதிலிருந்து, அவளுக்கு பிடித்தமான உணவை மட்டுமே சமைப்பதிலிருந்து என அனைத்துமே நான் செய்து கொடுக்கிறேன். இதனால், எனது மகளுக்கு, மறைமுகமாக நானே தீங்கு செய்கிறேனா?

இந்த உலகில் உள்ள ஆடம்பர மற்றும் தேவையற்ற பொருட்களின் மீது உங்களின் மகள் விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று கேள்விப்படும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதேசமயம், ஒரு தாயாக உங்களின் செயல்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது.

9 வயது பிள்ளைக்கென்று ஒரு தனியான சிந்தனையும், செயல்படும் திறனும் கட்டாயம் இருக்கும். எனவே, அவளுக்குத் தேவையான பல விஷயங்களை அவளாலேயே செய்துகொள்ள முடியும். தனக்கான உணவை தானே போட்டுக்கொண்டு சாப்பிடுவது, தனது அறையை தானே சுத்தம் செய்வது, தானே குளித்துக் கொள்வது போன்றவை அவற்றுள் முக்கியமானவை.

தேவையான விஷயங்களிலும், உடல்நிலை பாதிக்கப்பட்டிருத்தல் போன்ற நெருக்கடியான நேரங்களிலும் மட்டுமே உங்களின் உதவி தேவைப்படலாம். ஏனெனில், அனைத்தையும் நாமே செய்து கொடுப்பதன் மூலமாக, அவர்களின் சுய ஆற்றல் திறனை நம்மை அறியாமலேயே மழுங்கடிக்கிறோம். இதனால், எதிர்காலத்தில் அவர்கள் தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல் போகிறார்கள்.

எனவே, அவளுக்கென்று தேவையான சுதந்திரம் கொடுத்து, அவளின் தனித்தியங்கும் ஆற்றலை வலுப்படுத்தி, தன்னம்பிக்கையையும் வளர்த்தெடுக்க வேண்டும். இதன்மூலம் அவளின் செயல்பாட்டுத் திறன் மேம்பாடு அடையும்.

(Thanks to Arul Prakash who shared to me)