Friday, October 23, 2015

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி!!

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி!!
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்!
எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 – 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது.
மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.
1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

சளி, இருமலைத் துரத்தும் மிளகு!

சளி, இருமலைத் துரத்தும் மிளகு!
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் - மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி இது!
* சளி பிரச்னையில் வதைபடும்போது, இரவு உறங்குவதற்கு முன் 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் விட்டு, 10 பூண்டு பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் 2, 3 சிட்டிகை மிளகுத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு பனைவெல்லமோ, சர்க்கரையோ சேர்த்து நன்றாகக் கடைந்து சாப்பிட்டால் சளி விலகுவதோடு இரவில் சுவாசப் பிரச்னை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம். கூடுதல் போனஸாக மலச்சிக்கல் தீரும்.
* வறட்டு இருமலின்போது மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பலன் கொடுக்கும். கோழை கட்டியிருக்கும்போது 5 மிளகும், 10 துளசி இலையையும் 200 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தைக் குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.
* ஆஸ்துமா தொந்தரவு அதிகரிக்கும் வேளையில் வெற்றிலையுடன் 5 மிளகை சேர்த்து மென்று தின்றால் சுவாசம் எளிதாகி நிம்மதி கிடைக்கும்.
* தேள், பூரான் மற்றும் விஷ பூச்சிகள் எதாவது கடித்தாலோ, என்ன காரணம் என்றே தெரியாமல் உடம்பெல்லாம் தடித்து வீங்கி அலர்ஜி வந்தாலோ வெற்றிலையுடன் 3 அல்லது 5 மிளகு சேர்த்து மென்று தின்றால் விஷம் முறிந்துவிடும்.
* மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும்போது மிளகை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் அடுத்த நொடியே அடைப்பு விலகுவதோடு தடையின்றி சுவாசிக்க முடியும்.
(Thanks to Vikatan)

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்


(Thanks to Gobinath for sharing this)









சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !

மற்றவரகளுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.

இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு

இஞ்சி ஒத்தடம்:
=============

இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.

5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.

6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.

7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.

8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.

9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

பாதத்தின் நான்காம் விரல்:

நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.

உணவு முறை
============

சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.

பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================

உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.

அருமை நண்பர்களே !...

இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் .. எனவே இந்த தகவலை பலருக்கும் தயவு செய்து Share செய்யவோ அல்லது தனி நிலைத் தகவலாகவோ உங்கள் Time Line ல்பதிவு செய்து உதவுமாறு மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

Friday, September 11, 2015

திருமந்திரம்!

திருமந்திரம்!

 
நிற்கின்ற போதே நிலையுடையான் கழல்
கற்கின்ற செய்மின்; கழிந்து அனும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின்; தொழுத பின்
மற்றொன்று இலாத மணி விளக்காமே!

கருத்து: கற்பதற்கு உரிய பருவம், இளமைப் பருவம்; இறைவனின் சிறப்பியல்புகளை கூறும் நுால்களைக் கற்பதற்கு உரிய பருவமும் இளமைப் பருவமேயாகும். அவ்வாறு கற்பதால், நம்மைப் பீடித்துள்ள பாவங்கள் நீங்கும். கற்பதோடு நில்லாமல், அக்கண்ணுதலோனை வணங்குங்கள்! அக்கல்வி, இயல்பாகவே என்றும் ஒளிவீசும் மணி விளக்காக நின்று உங்களுக்கு உதவும்.

Tuesday, July 28, 2015

APJ நினைவாஞ்சலி

சாதி, மதங்களை கடந்தவரே!!!
பாகுபாடு காட்டாமல் பழகும் அன்பானவரே!!
இளைஞர்களை கனவு காண பழக்கியவரே!!!
மிகுந்த எளிமையானவரே!!!
இடைவிடாது உழைக்கும் உத்தமரே!!
பெரும் பதவியிலும் நேர்மையை காத்தவரே!!
உழைப்பால் உயர்ந்தவரே!!
இந்தியாவை வல்லரசாக்கும் பொருப்பை எங்களுக்கு கொடுத்து சென்ற உத்தமரே!!!
24 மணி நேரமும் உழைத்து அந்த உழைப்புக்கு பெருமை சேர்த்த நல்லவரே!!
உங்களை இழந்து நாங்கள் அனைவரும், வாடிக் கொண்டிருக்கிறோம்.
கண்களில் கண்ணீரோடு விடை கொடுக்கிறோம், போய் வாருங்கள்
தங்கள் ஆன்மா இனிமேலாவது ஓய்வு கொள்ளட்டும்,
எங்களுடைய வேண்டுதலே அதுதான்.

Friday, July 17, 2015

ஒற்றைத் தலைவலி - நிரந்தர தீர்வு!!(Permanent relief for Migraine headache)

ஒற்றைத் தலைவலி - நிரந்தர தீர்வு!!



எட்டி மரத்தின் கொழுந்து இலைகளை கொண்டுவந்து, பொடியாக நறுக்கி - ஒரு கைபிடியளவு எடுத்து - ஒரு சட்டியில் போட்டு , அத்துடன் வெள்ளைபபூண்டு , மிளகு வகைக்கு ஒருரூபாய் எடை ( 12 Gram ) எடுத்து அம்மியில் வைத்து அரைத்து அதையும் சட்டியில் போட்டு - ஒரு டம்ளர் அளவு நல்லெண்ணெய் விட்டு கலக்கி அடுப்பில் - மிகவும் சிறு தீ யாக வைத்து காசவேண்டும்.

எண்ணையில் உள்ள நீர் தன்மை அகன்று, இலை சிவந்து வரும் பொது இறக்கி வைத்து ஆரவிடவேண்டும். பிறகு வடிகட்டி வைத்து கொண்டு , தினசரி இரண்டு தேக்கரண்டி அளவு எண்ணையை தலை உச்சியில் வைத்து தேய்த்து, அரைமணி நேரம் ஊரியபின் - சியக்காய் தேய்த்து வெந்நீரில் தலைக்கு குளிக்கவேண்டும். தொடர்ந்து ஏழு நாள் தலைக்கு குளிக்கவேண்டும். இப்படி செய்துவந்தால் ஒற்றை தலைவலி குணமாகும். பிறகு வரவே வராது

Monday, July 13, 2015

திருவாளர் மூளை!


திருவாளர் மூளை!


மனித உடல் உறுப்புக்களில் மிக முக்கியமானவை மூளையும் இதயமும்தான். விஞ்ஞானத்தால் விடை காண முடியாமல் தவிக்கும் பகுதிகளுள் மூளைக்கே முதல் இடம். அதிசயத்தக்க மூளையைப் பற்றிய முக்கியமான சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நரம்பியல் நிபுணர் விஸ்வநாதன் கிருஷ்ணசாமி.
நம் அனைத்து உணர்வுகள், உணர்ச்சிகள், செயல்களை உள்வாங்கி அலசி ஆராயும் பிக் பாஸ்... மூளை. ஆனால், அத்தகைய மூளைக்கு உணர்ச்சி கிடையாது. வலி உணராது. மூளையில் ஏதேனும் அறுவைசிகிச்சை செய்யும்போதுகூட, நோயாளிக்கு வலி துளியும் இருக்காது
. ஒவ்வொருவருக்கும் மூளையின் எடை சற்று மாறுபடும். சராசரியாக ஆணின் மூளை 1.5 கிலோ கிராம் எடைகொண்டது. பெண்ணின் மூளை, ஆண் மூளையின் எடையைவிடச் சற்று குறைவு. மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உட்பகுதி மஞ்சள், வெள்ளை நிறத்திலும் காணப்படும். 20 வயதான ஆணின் மூளையில் உள்ள நரம்பு இழைகளின் மொத்த நீளம் 1,76,000 கிலோ மீட்டர். அதே வயதுடைய பெண்ணின் மூளை நரம்பு இழைகளின் நீளம் 1,49,000 கிலோ மீட்டர் இருக்கும். ஒரு மூளையின் கனத்துக்கும், அதன் புத்திசாலித்தனத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால் மூளை அளவுக்கும் உடல் அளவுக்கும் உள்ள உறவு மிக முக்கியம்.
மனித மூளையினுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன். அவற்றில் 100 பில்லியன் நியூரான்கள். இந்த நியூரான்களின் வலைப்பின்னல்தான் புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு எல்லாம். செயற்கை முறையில் நியூரான்கள் இணைந்து அமைப்பது என்பது இந்த நூற்றாண்டில் சாத்தியம் இல்லை.
கனவுகள், மூளைக்குள் ஏற்படும் செயற்கை நெருடல்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உறக்கம் என்பது பல படிநிலைகள் கொண்டது. தூங்குவதற்காகப் படுக்கையில் விழும்போது, முதலில் லேசான தூக்கம் வரும். அதன் பிறகு, ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்வோம். அப்போது ஒரே நொடிப் பொழுது கண் இமைகள் மூடிய நிலையில் இடது வலதாக நகரும். இதை ஸிணிவி REM (Rapid Eye Movement Sleep) என்போம். அப்போதுதான் கனவு வருகிறது. கனவில் கதையோட்டம் போன்ற உணர்வு ஏற்படும்.
'என் மனசுக்குப் பட்டுச்சு... அப்படி செஞ்சேன்’, 'உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா’ என்றெல்லாம் மனதை மையப்படுத்தி பேசுவோம். ஆனால், உண்மையில் மனசு, ஆன்மா இதெல்லாமே திருவாளர் மூளைதான். இதயம் என்பது ஒரு பம்ப் மட்டுமே. மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் ரத்தத்தை அனுப்பும் வேலையை மட்டும் செய்கிறது. மூளைதான் பிரதான குரு. மற்ற எல்லாமே சிஷ்யர்கள்தான்.
மூளையின் சில பகுதிகள் (பிரிமிட்டிவ் ஏரியா) மிருக இச்சைகள் கொண்டவை. பசி, தாகம், காமம் போன்ற உணர்வுகள், தன்னைப் பாதுக்காக்க, அடுத்தவரைத் தாக்க என வன்முறை உணர்வுகள், கோபதாபங்கள் எல்லாம் இயல்பாகவே ஒவ்வொருக்குள்ளும் இருக்கின்றன. வாழ்வாதாரத்திற்காக நிறைய விஷயங்களை மூளை தனக்காகப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும். அதற்கான நேரம் மற்றும் அவசியம் வரும்போது உடனடியாக அதைச் செயல்படுத்தும்.
மூளையின் மிக முக்கிய பகுதியான பினியல் க்ளான்ட், இதிலிருந்து சுரக்கும் மெலடோனின் எனும் ஹார்மோன் விழிப்பு/உறக்க சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது.
அருமையாக வயலின் வாசிக்கும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன், ஒரு மாலை வேளையில் வயலின் வாசித்தபடி இருந்தார். அப்போது அங்கு வந்த புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் இவரது இசையைக் கேட்டு கேலியாகச் சிரித்தார். ''நான் வயலின் வாசிக்கும்போது சிரிக்கிறீர்களே, நீங்கள் நகைச்சுவை வேடத்தில் நடிப்பதைப் பார்த்து நான் எப்போதாவது சிரித்திருக்கிறேனா?'' என்றார் ஐன்ஸ்டீன்.
அதுதான் மூளையின் டைமிங்!

(Thanks to Chan (a) Lakshmi)

Sunday, June 21, 2015

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

இது எப்படி ஏற்படுகிறது?







நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.


நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

தலைவலி :


நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.


படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!


அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :


ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.


மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.


மலச்சிக்கல் :


மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.


படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.


உயர் ரத்த அழுத்தம் :


உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.


காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

Tuesday, June 16, 2015

உடல் எடை குறைக்க சூப்பர் டிரிக்ஸ்!



குறைந்த கலோரி - நிறைந்த உணவு

கலோரிகள் இல்லாத, நிறைவான உணவைச் சாப்பிடலாம். வாழைத்தண்டு, புடலங்காய், பீர்கங்காய், பீன்ஸ், அவரைக்காய், பூசணி, கோவைக்காய், கீரைகள், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் எப்போதும் கலோரிகள் குறைவாகவே இருக்கும். இதை அதிக அளவில் சாப்பிட்டாலும்கூட உடல் எடை அதிகரிக்காது. அதிக நார்ச்சத்தும்கூட கொழுப்பைக் கரைக்க உதவும்.

கடைசியில்தான் அரிசி சோறு

முதலில் சாலட், அடுத்து கீரை, அதற்குப் பிறகே அரிசி சோறும் குழம்பும் சாப்பிடலாம். வெறும் குழம்புக்கு மட்டும் சாதத்தைச் சாப்பிடாமல், சிறிதளவு ரசம், மோர் எனப் பிரித்துச் சாப்பிட வெரைட்டியாகச் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். சமச்சீரான உணவையும் சாப்பிட முடியும். எப்போதுமே, கிரேவியை முதலில் சாப்பிடக் கூடாது. கிரேவியின் ருசியால் நாம் அதிக அளவு உணவைச் சாப்பிடும்படி தூண்டுதல் ஏற்படும்.

நொறுக்குத்தீனி மோகம்
வீட்டில் இருக்கும்போது, எதையாவது எடுத்துச் சாப்பிட நாக்கு தூண்டும். அப்போது, வெள்ளரி விதைகள், உலர் பழங்கள், கொட்டைகள் சாப்பிடலாம். சிப்ஸ், பிஸ்கட், கேக் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். ஒருவேளை ஆசைக்காக சாக்லெட், பிஸ்கட் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும், அதற்குப் பின் வாயை நன்றாகக் கொப்பளித்துவிட வேண்டும். இதனால், மீண்டும் மீண்டும் பிஸ்கட், சாக்லெட் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு குறைந்துவிடும். ஐஸ்கிரீம் சாப்பிட நினைத்தால், அதற்குப் பதிலாகப் பழங்களால் ஆன ஸ்மூத்தியை ஃப்ரீசரில் வைத்து, ‘ஐஸ்கிரீம்’ போல சாப்பிடலாம்.

நீல நிறம் பார்த்தல்
பொதுவாக ஹோட்டல், டைனிங் ஹாலில் நீல நிறத்தை பெயின்ட் அடிக்க மாட்டார்கள். ஏனெனில், நீல நிறம் பசியைக் குறைக்கும். கலர் தெரப்பியில், நீல நிறத்தைப் பசியைக் குறைப்பது (Appetite suppressant) என்று சொல்வர்கள். அதனால், குறைவாகச் சாப்பிட நினைப்பவர்கள் நீல நிற மேசை விரிப்பில் வைத்தும், நீல நிறக் கைக்குட்டையை அருகில் வைத்தும் சாப்பிடலாம். ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் பசியை அதிகப்படுத்தும் என்பதால், உண்ணும் நேரங்களில் இந்த நிறங்களைப் பார்பதைத் தவிர்க்கலாம்.

கண்ணால் சுவைத்தல்
நமக்குப் பிடித்த உணவை, சாப்பிட்டு ருசி பார்ப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, பிறகு உணவைச் சாப்பிட்டால், சாப்பிடும் உணவின் அளவு குறைந்துவிடும். திருப்தி முன்னரே வந்துவிட்டதால் அதிகமாகச் சாப்பிடத் தோன்றாது. அதுபோல், வெள்ளைத் தட்டில் சாப்பிட்டால், உணவு அதிகமாக இருப்பது போல கண்களுக்குத் தோன்றும். மேலும், வெள்ளைத் தட்டு சின்னதாக இருந்து, தட்டு முழுவதும் உணவைப் பரப்பி சாப்பிடுவதாலும், நிறைய சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். உணவைச் சாப்பிடத் தொடங்கும்போது, முதலில் முகர்ந்து, பின் ரசித்து, ருசித்துச் சாப்பிட வேண்டும்.

பழைய தோற்றத்தை நினைவுபடுத்துதல்
நாம் ஸ்லிம்மாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை மொபைல் ஸ்கீரீன் சேவர், வால் பேப்பர், டெஸ்க் டாப் வால் பேப்பர், வாலட் போன்ற அடிக்கடி நாம் பார்க்கும் இடங்களில் வைக்கலாம். இதனால், மீண்டும் ஸ்லிம்மாக மாறவேண்டும் என்ற உந்துதல் நமக்கு ஏற்படும். பீரோவில்கூட நம்முடைய அளவில் ஒரு சைஸ் சிறிய அளவிலான ஒரு டிரஸ்ஸை வாங்கிவைத்து அது நமக்குச் சரியாகப் பொருந்துகிற அளவுக்கு நம் எடை குறைய வேண்டும் என்ற நோக்கத்தை மனதில் உருவாக்கிக்கொள்ளலாம்.

உடற்பயிற்சி

தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப் பயிற்சிகளையும் செய்யலாம். தனியாகப் பயிற்சி செய்ய மனம் இல்லை எனில், வீட்டில் இருப்பவர்கள், அருகில் வசிப்பவர்களுடன் சேர்ந்து பயிற்சிகள் செய்யலாம். இதனால், உடற்பயிற்சி செய்ய ஆர்வம் அதிகரிக்கும். உடலும் ஆரோக்கியம் பெறும். ஒருநாளைக்கு மூன்று முறை சாப்பிடுதல், இரண்டு முறை குளித்தல் போன்ற கட்டளைகளோடு ஒருவேளை உடற்பயிற்சி என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நன்றி டாக்டர் விகடன்


35 Ways to Respect your Children's views

35 Ways to Respect your children's views and ways to know them in a better way. Must read

1. Put away your phone in their presence.

2. Pay attention to what they are saying.

3. Accept their opinions.

4. Engage in their conversations.

5. Look at them with respect.

6. Always praise them.

7. Share good news with them.

8. Avoid sharing bad news with them.

9. Speak well of their friends and loved ones to them.

10. Keep in remembrance the good things they did.

11. If they repeat a story, listen like it's the first time they tell it.

12. Don't bring up painful memories from the past.

13. Avoid side conversations in their presence.

14. Sit respectfully around them.

15. Don't belittle/criticize their opinions and thoughts.

16. Avoid cutting them off when they speak.

17. Respect their age.

19. Accept their advice and direction.

20. Give them the power of leadership when they are present.

21. Avoid raising your voice at them.

22. Avoid walking in front or ahead of them.

23. Avoid eating before them.

24. Avoid glaring at them.

25. Fill them with ur appreciation even when they don't think they deserve it.

26. Avoid putting your feet up in front of them or sitting with your back to them.

27. Don't speak ill of them to the point where others speak ill of them too.

28. Keep them in prayers always possible.

29. Avoid seeming bored or tired of them in their presence.

30. Avoid laughing at their faults/mistakes.

31. Do a task before they ask you to.

33. Choose your words carefully when speaking with them.

34. Call them by names they like.

35. Make them your priority above anything.

Children are parents treasure and their most precious gift on this land. They must have seen the world lesser than you but they see it in a different way which you need to appreciate. Listen to them and try giving them as much time as you can. These moments are more precious than anything in this world


Thursday, May 28, 2015

Talk With Your Kids - குழந்தைகளுடன் பேசுங்கள்!


குழந்தைகளுடன் பேசுங்கள்!

கோடைகால விடுமுறையில், குழந்தைகள் இருக்க, என்ன செய்வதென்று அறியாது பெற்றோர், மாணவர்களை பல கோடைகால வகுப்புகளுக்கு அனுப்புவதில் முனைப்பு காட்டுகின்றனர். இப்போதாவது குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசுங்களேன் பெற்றோரே!

ஒவ்வொரு குழந்தையும், 1-5ம் வகுப்பு வரை கற்றுத்தரும் அடிப்படை கல்வியை வைத்தே, உயர்கல்வி கற்கும் ஆற்றலை பெறுவர். 1-5ம் வகுப்பு வரைதான் அவர்களின் மனதில், எந்தவொரு சிந்தனையும் இல்லாது, எடுத்து கூறுவனவற்றை உள்வாங்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.

இச்சமயத்தில், குழந்தைகளுக்கு படிப்பையும், நற்பண்புகளை வளர்க்கும் குணத்தையும் உருவாக்குவது முக்கியம். நாகரீக உலகில் பரபரப்பான சூழலில் அங்கும், இங்கும் பறக்கும் பெற்றோர், குழந்தைகளுடன் அமர்ந்து நேரத்தை செலவிடுவது அரிதாக உள்ளது.

படிப்பில்லாத கலையை கற்க, செலவழித்து பல பள்ளிகளுக்கு அனுப்புவது சிறந்த காரியம் தான்.

ஓராண்டு முழுவதும் புத்தகப்பையும், பேனாவும் பிடித்து அலைந்த கைகள், அடுத்தபடியாக எதை கற்க விரும்புகிறதோ, அதில் நாட்டத்தை செலுத்த விடுங்கள். நம் பிரியத்தையும், கனவையும் அவர்களின் தலையில் வைக்காமல், அவர்களின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வது நல்லது. விடுமுறையில் ஒரு நாளைக்கு குறைந்தது, 3 மணி நேர வகுப்புக்கு மட்டும் அனுப்புங்கள். மீதமுள்ள நேரத்தில், பெற்றோர், குழந்தைகளுடன் அமர்ந்து பேசலாம். இந்த விடுமுறையில்...

* பெற்றோர், குழந்தைகளுடன் அமர்ந்து பேசும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதுவே, அவர்களின் மனநிலையையும், விருப்பங்களையும் அறிந்து கொள்ள உதவும்.

* விடுமுறை நாட்களில் அனுப்பும் வகுப்புகள், அவர்களுக்கு பிடித்தவையாக இருக்க வேண்டும். அப்போது தான், அதில் முழு ஈடுபாடு செலுத்தி சிறந்து விளங்குவர்.

* இதெல்லாவற்றையும் விட, ஊரில் இருக்கும் பாட்டி, தாத்தா உடன் நாட்களை கழிக்க வைப்பது, இன்னும் பல அனுபவங்களை கற்று தருவதோடு, வித்தியாசமான சூழலை அறியும் வாய்ப்பாகவும் அமையும்.

* சில குழந்தைகள், வீடியோ கேம் விளையாடியே நேரத்தை போக்குவர். அதில் மூழ்கி விளையாடும் போது, ஏதாவது ஒரு விளையாட்டில் தோற்றால், மன வருத்தம் அடைகின்றனர். இதற்கெல்லாம் இடம் தராமல், உங்கள் அன்பான பேச்சு காதில் விழுந்தால் மன அழுத்தம் ஏற்படாது.

குழந்தைகளின், 1-5 வகுப்பு வரையிலான பராமரிப்பு முக்கியமானது, ஆகையால், அவர்களுடன் முடிந்தளவு பெற்றோர்கள் உடன் இருந்து பார்த்துக் கொண்டால், எதிர்காலம் சிறப்பாக அமையும்

சருமமே சகலமும்!


சருமமே சகலமும்!

தோல் மனிதனின் அழகு அடையாளம். மாசு, மருவற்ற பளிங்கு போன்ற சருமமும், பார்த்ததும் பரவசப்படுத்தும் 'பளிச்’ நிறமும் வேண்டும் என்பதற்காக என்னென்னவோ முயற்சிக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும், சருமத்தில் மாற்றங்கள் தோன்றுவது இயற்கைதான். சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் பாராமரிப்பு முறைகளைச் சரிவரக் கையாண்டால், சருமத்தில் நிரந்தரமான அழகைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சரும நிபுணர்கள். ஒவ்வொருவரின் நிறத்தையும் வெளிக்காட்டுவதோடு நம் சருமத்தின் வேலை முடிவதில்லை. சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-யைத் தயாரிப்பது, வெளியில் இருந்து வரும் கிருமிகளை அண்டவிடாமல் அரண்போல் காப்பது, குளிர் காலத்தில் உடலைச் சூடாகவும், கோடைக் காலங்களில் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்வது எனப் பற்பல பணிகளை மேற்கொள்கிறது. உடலை ஒரு போர்வையாகப் போர்த்தி இருக்கும் சருமத்தைப் பாதுகாக்க, அழகாக்க, மிளிரவைக்க அட்டகாசமான டிப்ஸ்களை வழங்குகின்றனர் தோல் சிகிச்சை மருத்துவர் ரத்னவேல், சித்த மருத்துவர் வேலாயுதம், இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

வியர்வை
மனிதனின் உடலில் இருந்து ஒரு நாளைக்குச் சராசரியாக அரை லிட்டர் வியர்வை வெளியேறும். உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைப்பதற்குத்தான் வியர்வை சுரக்கிறது. அது வரும் பாதையில் அடைப்பு இருந்தால், அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, சின்னச் சின்னக் கொப்பளங்கள் தோன்றும். இதுதான் வியர்க்குரு.

வியர்க்குரு பிரச்னையில் இருந்து விடுபட...

தினமும் குறைந்தது இரண்டு முறை குளிக்கவேண்டும். கேலமைன் (calamine)லோஷன் தடவுவது நல்லது.

நல்ல காற்றோட்டமான அறையில் இருந்தால், தோலில் ஏற்படும் அடைப்பு சரியாகிவிடும். பருத்தி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். சன்ஸ்க்ரீன் மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்துவது நல்லது.

இளம் சூடான நீரில் உள்ளங்கைகள், பாதங்களை 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்தால் வியர்வை குறையும். வியர்வையை அழுத்தித் துடைக்காமல், மிருதுவான துணியால் ஒத்தி எடுக்கவேண்டும். இது தற்காலிகத் தீர்வுதான்.

சித்த மருத்துவத்தில் தீர்வு தேடுவோர் 100 கிராம் செண்பகப்பூ, ரோஜா மொட்டு, பொன் ஆவாரம்பூ, தவனம் போன்ற பூக்களை உலர்த்தி, அத்துடன் கடலைப் பருப்பு சம அளவு எடுத்து, சிறிதளவு வெட்டிவேர், சந்தனம், வெள்ளரி விதை, முல்தானி மட்டி, கால் கிலோ பயத்தம்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியைத் தினமும் தேய்த்துக் குளிக்க, வியர்வை நாற்றம் நீங்கும்.

வியர்வையில் பூஞ்சைகள் வளரக்கூடும். அதனால், குளித்து முடித்ததும் வியர்க்குரு பவுடர் போடுவதன் மூலம் இதுபோன்ற பூஞ்சைப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.

உணவில் வெங்காயம் அதிகம் சேர்க்கக் கூடாது. டியோடரன்ட், சென்ட், க்ரீம்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.

சிவப்பும் கருக்கும்
பொதுவாக, தோலின் மேல்பாகம் 28 நாட்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. தோலின் நிறம் ஃபியோமெலனின் (Pheomelanin)மற்றும் யூமெலனின் (Eumelanin)என்ற மெலனின் அணுக்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இயற்கை ஒருவருடைய தோலின் நிறத்தை கூடுதல் ஃபியோமெலனின் கொண்டு எழுதினால், அவருடைய தோல் நிறம் வெள்ளையாகவும், யூமெலனினைக் கூடுதலாகக் கொண்டு எழுதினால் கறுப்பு நிறமாகவும் அமையும்.

வெயிலில் அதிகம் அலைபவர்களுக்கு நிறம் மங்கும். கை, கழுத்து, முகம் பகுதிகளில் கறுத்துவிடும். நல்ல நிறத்துடன் இருப்பவர்கள் வெயிலில் போய்விட்டு வந்தால், கன்னம் மற்றும் முகம் சிவந்துவிடும். உடலில் மூடப்படாத பகுதியைத்தான் சூரியக் கதிர் நேரடியாகத் தாக்கி, எரிச்சலை ஏற்படுத்துகிறது.

கழுத்தில் அணியும் நகைகள், மஞ்சள் கயிறு இவற்றால் அலர்ஜி, அரிப்பு ஏற்பட்டு, தோலின் நிறம் மாறிவிடும்.

பாதிக்கப்பட்ட இடத்தில் பப்பாளியை அரைத்துப் பூசுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

தோல் பாதிக்கப்படாமல் இருக்க சன்ஸ்கிரீன் போடலாம். முடிந்தவரை, பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம்.

முகப்பரு
முகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு மற்றும் பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் வரலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும்.

சிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில் பருக்கள் போலவும், தோலில் முட்களும் தோன்றலாம். இதற்கு, ஃபாலிகுலர் ஹைப்பர்கெரட்டோஸிஸ் (follicular hyperkeratosis) என்று பெயர். வைட்டமின் ஏ, டி அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் ஆகியவற்றின் குறைபாட்டால் இது ஏற்படுகிறது.

பரு வராமல் தடுக்க:

அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், கேலமைன் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.

தினமும் ஐந்து முறை முகத்தை உங்கள் சருமத்துக்கு ஏற்ற சோப்பினால் கழுவ வேண்டும்.

ஜாதிப்பூ மொட்டு, முல்லை மொட்டு இரண்டையும் சம அளவு எடுத்து, பால் விட்டு நைஸாக அரைத்து, பருக்களின் மீது பூசுங்கள். பருக்கள் மறைந்துவிடும். நிறமும் கூடும்.

எலுமிச்சம்பழச் சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் மறையும்.

ஆறு மாதங்கள் தொடர்ந்து டாக்டரின் அறிவுரையின்பேரில் மாத்திரை, மருந்துகள் மற்றும் களிம்பு பயன்படுத்துவதன் மூலம், முகப்பரு மறுபடியும் வராமல் தடுக்கலாம்.

பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்பு, வளரும் தன்மை உள்ள மரு, டாட்டூ மற்றும் பச்சை குத்தியதை நீக்குவதற்கும் நவீன சிகிச்சைமுறைகள் உள்ளன.

அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக்கொண்டு மட்டுமே குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்குத் தகுந்த சிகிச்சைமுறையைத் தேர்வு செய்வதன்மூலம், வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும்

Wednesday, May 27, 2015

36 வயதினிலே திரை விமர்சனம்

அன்புள்ள நண்பர்களே!!!

வணக்கம்!! நலம்தானே? மீண்டும் உங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஒரு சிலர் ஒரு சில விஷயங்களுக்காக பிரபலமானவர்களாக இருப்பார்கள். அதே போல் சில திரைப்படங்கள் பெண்களுக்கான திரைப்படங்களாக இருக்கும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். அது மட்டுமில்லாமல் பெண்களை சுற்றி மாற்றத்தைக் கொண்டு வரும். அந்த வரிசையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம். கண்டிப்பா கண்டுபிடிச்சிருப்பீங்க ஆமாங்க 36 வயதினிலே படத்தை தாங்க பார்க்க போகிறோம்.

ஜோதிகா ஒரு ரெவுன்யு துறையில் பணிபுரியும் அரசு அதிகாரி. இவரது கணவர் ரஹ்மான் வானொலியில் பணிபுரிகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தாலும் வசந்தி சராசரி குடும்பங்களில் இருக்கும் குடும்ப தலைவியைப் போலவே இருக்கிறார். வீட்டுத் தோட்டம் அமைத்து காய்கறிகளை பயிரிடுகிறார். இது இவரது கணவனுக்கு பிடிப்பதில்லை. கணவருக்கும், பெண் மிதிலாவிற்க்கும் ஐயர்லேண்ட் போயி, அங்கேயே படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக ஜோதிகாவும் வெளி நாட்டில் வேலை தேட நினைக்கிறார். ஆனால் இங்கே 36 வயது ஒரு பெரும் தடையாக இருக்கிறது. வேலை கிடைக்க வில்லை. இதற்க்கிடையில் ஜோதிகாவை கமிஷ்னர் பார்க்க விரும்புவதாக கூறுகிறார்கள். அங்கே இவருடைய பெண் மிதிலா ஜனாதிபதியிடம் ஒரு கேள்விக் கேட்க, அதை சற்றும் எதிர்பார்க்காத ஜனாதிபதி "உனக்கு யார் இந்த கேள்வியை சொல்லி கொடுத்தது?" இவரும் என்னுடைய அம்மாதான் எனறு சொல்கிறார். அதனால் அவர் ஜோதிகாவை சந்திக்க விரும்புகிறார். இதற்கிடையில் ரஹ்மான் ஒரு விபத்தில் ஒரு சிறுவன் மீது ஏற்றி அது கேஸ் ஆகி விடுகிறது. இதனால் ஜோதிகாவின் டிரைவிங் லைசென்ஸை உபயோகிக்கலாம் என்று பார்க்கிறார். அது காலாவதி ஆகி இரண்டு வருடம் ஆகி விட்டது(ஐயோ பாவம்) சொல்ல வேண்டுமா கணவன்களுக்கு, தை தக்கா தை தக்கா என்று குதிக்கிறார் ரஹ்மான். இப்படி ஒரு பக்கம் பிரச்சினை.
இதற்கிடையில் வீட்டுத் தோட்டத்தில் விளையும் காய்கறிகளில் 2000 பேருக்கு காய்கறி கேட்க, அனைத்து வீட்டு மொட்டை மாடிகளிலும் பயிரிடலாம் என்று முடிவு செய்ய அங்கேயும் பிரச்சினை. நிறைய காமெடி கலாட்டாவும் உண்டு.

மற்றொரு பக்கம் இவரையும், மாமனார், மாமியாரையும் மட்டும் விட்டு விடு கணவன், குழந்தையும் மட்டும் வெளி நாடு செல்ல திட்டமிடுகிறார். மிகவும் உடைந்து போகிறார் ஜோ(நாமும்தான்). அவர்கள் சென்றதும் ஜோ வின் தோழி அபிராமி இவரை சந்திக்க வருகிறார். இவர் மார்கெட்டிங் தொழிலில் அதிக அளவில் சாதித்து பெரிய நிறுவனத்திலும் இருக்கிறார். அவர் சந்தித்து சொல்லும் ஒவ்வொரு வாக்கியமும் நிச்சயம் பெரிய கைத்தட்டலை பெருகிறது. ஜோவை
தூக்கி நிறுத்துகிறதா? இவரது இயற்க்கை விவசாயம் ஜெயித்ததா? இவர் வெளி நாடு சென்றாரா? ஜனாதிபதியை சந்தித்தாரா? திரையில் பார்த்து விட்டு சொல்லுங்களேன்.

ஜோவிற்க்கு 8 வருடத்திற்க்கு பிறகான படம். நல்ல முதிற்ச்சி தெரிகிறது. ஒவ்வொரு இடத்திலும் தனியாக தெரிகிறார். நிச்சயமாக ஓங்கிச்சொல்லாம் இந்தியப் பெண்களின் பதிப்பு இவர் என்று. ஒரு தாயாக, மருமகளாக, மனைவியாக இப்படியாக பல பரிணாமங்களில் ஜொலிக்கிறார். பேருந்தில் வரும் சக பயணி ஒருவரிடம செய்யும் கலாட்டாவாகட்டும், மகளிடம் மன்றாடும் போது கோபத்தில் வா அயன் பாக்ஸ் வைச்சு மூஞ்சுல தேய்க்கிறேன் என்று சொல்வதாகட்டும் எல்லாமே தூள்.



ரஹ்மானும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் மனிதன் எப்பொழுதுமே சிடுசிடு...

பாரட்ட வேண்டிய விஷயம் வசனங்கள்தான். குறிப்பாக எதற்கெடுத்தாலும் அழுவது இந்த தலைமுறையோடு முடியட்டும், பிரசவ வலியைவிட கொடுமையானது கணவன் அவமானப் படுத்துவதுதான், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் நிறைய இடங்களில் கைத்தட்டலை வாங்குகிறார் விஜி.

தயாரிப்பு சூர்யா, இசை சந்தோஷ் நாரயணன், இயக்கம் ரோஷன். பல விஷயங்களில் நன்றாக இயக்கி இருக்கிறார்கல். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் இயக்கத்தில் கவனித்து இருக்கலாம்.

ஆனால் நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம் பெண்கள் எப்படி தங்கள் கனவுகளை தொலைக்காமல் திருமணத்திற்க்கு பிறகும் இருப்பது, மற்றும் இயற்கை விவசாயத்தை தூக்கி நிறுத்துவதாலும். நிச்சயம் ஓ போடலாம். படத்தை பார்த்து முடிக்கும் பொழுது அடுத்து அந்த சாதனை வரிசையில் நாம்தான் என்று நினைக்க வைக்கிறது.

தோழிகளே படத்தை உங்கள் கணவனோடு சேர்ந்து பாருங்கள். இன்னும் அர்த்தமுள்ளதாகிறது.
மொத்தத்தில் 36 வயதினிலே முற்பாதி இளமை, பிற்பாதி இயற்கை.
நன்றி!! வாழ்க வையாகம்!! வாழ்க வளமுடன்!!

Thursday, May 14, 2015

ஏசி வாங்கும் முன்இன்னொரு முறை யோசியுங்கள்!



(Thanks to Kumudam)
‘‘நைட்டு ஒரே புழுக்கம்... தாங்கவும் முடியல... தூங்கவும் முடியல... எவ்வளவு செலவானாலும் புது ஏசி வாங்கி வீட்ல மாட்டப்போறேன்!’’ இப்படி அங்கலாய்த்துக் கொள்பவரா நீங்கள்? அப்போது நீங்கள்தான் முதலில் இதைப் படிக்க வேண்டும்!



ஒரு காலத்தில் ஏர்கண்டிஷனர் சாதனம் ஆடம்பரப் பொருளாக இருந்தது. காலத்தின் தேவையில் அலுவலகங்கள் குளிர்சாதன வசதிக்கு மாறிவிட்டன. இதனால் ஏசியின் குளுமைக்கு பெரும்பாலான மக்கள் பழகிப்போனார்கள். வீட்டிலும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்தது. இங்குதான் பிரச்னையே ஆரம்பம். தொடர்ந்து ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறைகளில் அமர்ந்து வேலை செய்வதால் உடலியல் சார்ந்த பல பிரச்னைகளும் நோய்களும் ஏற்படுவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஏசியால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதை எவ்வாறு தவிர்ப்பது எனவும் மருத்துவ நிபுணர்களிடம் உரையாடினோம்...

டாக்டர் கே.ராஜ்குமார்
(
சுவாச நோய்கள் சிறப்புமருத்துவர்)

‘‘
இன்று குளிர்சாதன வசதி என்பது மிகவும் இன்றியமையாததாக மாறிவிட்டது. ஏசியில் வரும் காற்றானது இயற்கையானது கிடையாது. இயற்கையான காற்றில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து, அதைப் பயன்படுத்திக் குளிர் காற்றாக கொடுக்கிறது. இன்னொரு புறம் அறையில் உள்ள வெப்பமான காற்றை வெளியேற்றுகிறது. இதற்குகுளோரோஃப்ளுரோ கார்பன்மூலப் பொருளாகப் பயன்படுகிறது. இது வெளியேற்றும் உஷ்ணக் காற்றால்தான் புவி வெப்பமடைதல் அதிகமாகி ஓசோன் ஓட்டையை அதிகப்படுத்துகிறது.

ஏற்கனவே ஒவ்வாமை பிரச்னை (அலர்ஜி) உள்ளவர்களுக்கு ஏசி காற்று பல பிரச்னைகளை ஏற்படுத்தும். கூருணர்ச்சி (Hyper Reactive) அதிகமாக உள்ளவர்களுக்கு உடலில் சொறி, அரிப்பு, மூக்கில் சளி ஒழுகுதல், காதில் அரிப்பு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படக்கூடும். அலர்ஜி உள்ளவர்கள் ஏசியில் இருந்து விலகி இருப்பதே நல்லது. குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறை ஏசியிலுள்ள தூசி மற்றும் அழுக்குகளை முறையாகச் சுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில், அவற்றில் லிஜினல்லா நிமோபிலியா என்ற பாக்டீரியா வளரும். இது ஏசியில் மட்டும் வளரக்கூடிய பாக்டீரியா. சுவாசப்பாதையில் இவ்வகை பாக்டீரியா பரவினால் கடுமையான நிமோனியாவை உருவாக்கும்.

சில வீடுகளில் விண்டோ ஏசியில் பின்பக்கம் புறாக்கள் வசிக்க ஆரம்பிக்கும். புறாக்களின் கழிவுகள் அதில் சேர்ந்துவிடும். இதில் பூஞ்சைகள் வளரும். கிரிப்டோகாக்கஸ் எனப்படும் பூஞ்சையானது மனித மூளையைத் தாக்கக் கூடியது. இந்தப் பூஞ்சையானது சுவாசப் பாதையையும் மூளையையும் தாக்கிக்ரிப்டோகாக்கல் மெனிஞ்சைட்டிஸ்எனும் ஆபத்தான நோயை உருவாக்கக் கூடியது.

எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டு வலி, முதுகு வலி போன்றவை எளிதாக வரும். இதற்காகத்தான் நம் முன்னோர் அதிகாலையில் சூரிய வணக்கம் செய்து வந்தனர். காலை 6 மணியில் இருந்து 7:30 மணி வரை உள்ள கதிரவனின் கதிர்களில், மனித உடலுக்கு அவசியமான வைட்டமின் டி கிடைக்கும். இந்த நேரத்தில் உடலில் சூரியனின் ஒளி படுமாறு நிற்பது அவசியம்.

ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும். மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்தாற்போல இருப்பது ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். சிலருக்கு ஏசியின் குளிர்ந்த காற்று சுவாசப் பாதையை ரணமாக்கிவிடும். கூருணர்ச்சி அதிகமுள்ளவர்கள் ஏசியை முடிந்த அளவு தவிர்த்து விட வேண்டும்.

சிலர் (விண்டோ) ஏசியின் அருகிலேயே தலை வைத்து படுப்பார்கள். குளிர்ந்த காற்றானது இரவு முழுவதும் காதுக்குள் சென்று முக நரம்பை பாதிப்படையச் செய்துபெல்ஸ் பேல்சி’ (Bell’s palsy) என்னும் முகவாதத்தை உருவாக்கும். காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்த்தால் வாய் ஒரு பக்கம் கோணிக் காணப்படும். ஏசியின் மிக அருகில் தூங்குவதைத் தவிர்த்து விட வேண்டும்.

வீட்டின் அருகே மரம், செடி, கொடிகளை வளர்த்து, காலையில் எழுந்து சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். சூரிய ஒளி உடலில் படும்படி சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சிகளை முறைப்படி தினமும் செய்வது உங்களது வாழ்நாளைக் கூட்டும். அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் அமிலத்தன்மை உடைய திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் தவிர்த்து, மற்ற பழங்களை உண்ணலாம்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஏசியால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். ஏசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏசி பகுதியில் வேலை பார்க்கும் நிர்பந்தம் உள்ளவர்கள், காதுகளில் ஏர் பிளக் அல்லது பஞ்சை வைத்து சமாளிக்கலாம். முடிந்த வரை முகத்தை ஏசிக்கு அருகில் வைக்காமல் தள்ளி அமர்ந்துகொள்ள வேண்டும்..."

‘‘
ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பதால் சருமமானது எண்ணெய் பசை சுரப்பதை நிறுத்திவிடுகிறது. எண்ணெய் பசை திரவங்களும் வியர்வையும் சரியான முறையில் சுரந்தால்தான் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். இல்லாவிட்டால் சருமம் உலர்ந்து, வறண்டு விடும். ‘ப்ரீமெச்சூர்டு ஏஜிங்எனப்படும் வயதுக்கு முந்தைய மூப்புத் தோற்றம் ஏற்படும்.
ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடைய ஆரம்பிக்கும். கூந்தலின் வலுவும் குறையும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். ஏசியை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்துபவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சருமம் பாதிக்கும். அலுவலகத்தில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை அல்லது மெட்ராஸ் போன்ற நோய்கள் இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதில் பரவிவிடும்.

சிலருக்கு கண்களில் கண்ணீர் சுரக்காமல் உலர்ந்துவிடும். இவர்களுக்கு கண்களில் வலி, எரிச்சல் இருக்கும். ‘ஆர்ட்டிஃபிசியல் டியர்ஸ்’ (Artificial tears) எனப்படும் செயற்கை கண்ணீர் இப்போது கிடைக்கிறது. மருத்துவர் ஆலோசனையுடன் அதைப் பயன்படுத்தி, கண்கள் உலர்வதை சரிசெய்து கொள்ளலாம். சருமம் உலர்வதை தரமான மாய்ச்சுரைஸிங் க்ரீம் பயன்படுத்துவதன் மூலம் தடுக்கலாம். ஹையலுரானிக் ஆசிட் (Hyaluronic acid) எனும் முகத்தில் சுரக்கும் திரவமே முகத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த ஆசிட் அடங்கிய மாய்ச்சுரைஸிங் க்ரீம் இப்போது கிடைக்கிறது. மருத்துவர் ஆலோசனையுடன் அதைப் பயன்படுத்தி முகச்சுருக்கங்களைத் தவிர்க்கலாம்.

ஏற்கனவே சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந்தால் நோய் இன்னும் தீவிரமாகும். இயற்கையான சூரிய ஒளியும், மாசு இல்லாத சுகாதாரமான காற்றும் நமது சருமத்துக்கு அவசியம் என்பதை மறந்துவிடக்கூடாது. அதனால், தேவைக்கு ஏற்பவே ஏசியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏசியை அதிக நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.”ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடைய ஆரம்பிக்கும். கூந்தலின் வலுவும் குறையும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்...
டாக்டர் எல்.ஆர்த்தி
(
சருமநல நிபுணர்)