Sunday, April 21, 2013

படித்ததில் பிடித்தது :)


ஒரு கறுப்பின சிறுவனை பார்த்த ஒரு வெள்ளைக்காரன் ஏளனமாய் சிரித்தானாம்.

எதற்க்காக சிரிக்கிறீர்கள் ? என்று அந்த சிறுவன் கேட்க நானோ வெள்ளை நீயோ கருப்பு எனக்கு தான் எதிலுமே முன்னுரிமை, வெள்ளையர்கள் தான் மேல் இருப்பார்கள் கருப்பர்கள் கீழே தான் இருப்பார்கள் என்று ஏளனம் செய்து சிரித்தான்.

அந்த வெள்ளையனை பார்த்து அந்த சிறுவன் சிரிக்கத் துடங்கினான். ஏனடா சிரிக்கிறாய் ? என்று கேட்டான் அந்த வெள்ளைக்காரன்.

எப்பொழுதும் வெள்ளை தான் மேலே கருப்பு கீழே என்றீர்களே அதை நினைத்துதான் சிரித்தேன்.. என்னை பொருத்தவரை கருப்பு என் தலைக்கு மேலே, வெள்ளை என் காலுக்கு கீழே என்றான்.

ஒன்றும் புரியவில்லை அந்த வெள்ளையனுக்கு. என்ன சொல்கிறாய் ? என்று கேட்டான்.

கருப்பு என் தலைக்கு மேலே அது " என் தலை முடி" வெள்ளை என் காலுக்கு கீழே அது "என் கால் பாதம்" என்று விளக்கம் கூறினான் அந்த சிறுவன். வாயடைத்துப் போய்விட்டார் அந்த வெள்ளைக்காரர்.

எதையுமே வித்தியாசமாக பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்...!

No comments: