Sunday, July 24, 2011

இளமையிலேயே கடமையாற்றுங்கள்

* யாருடைய குற்றங்களையும் காணாதே. பிறரது குற்றங்களைக் காணத்
தொடங்கினால் அதுவே கடைசியில்
உங்கள் இயல்பாகிவிடும்.
* மனித உடம்பு நிலையற்றது. இப்போது இருக்கிறது. ஆனால், அடுத்த கணம்
இல்லாமல் போய்விடும். அதற்குள் உன்னால் முடிந்த நல்ல செயல்களைச் செய்வது மேலானது.
* சாதனை ஆகட்டும். தவமாகட்டும். தீர்த்த யாத்திரை ஆகட்டும். பணம் சம்பாதிப்பது ஆகட்டும். எந்த நல்ல செயலையும் செய்வதென்று தீர்மானித்து விட்டால் அதை இளமையிலேயே செய்துவிடுங்கள்.
* ஆசையின் சாயலே நம் மனதில் அற்றுப் போக
வேண்டும். அப்போது தான் பிறவியில் இருந்து
விடுதலை கிடைக்கும்.
* நீங்கள் ஒரு நற்பணி செய்தால், அதனால் உங்கள்
பாவச்சுமை விலகும். தியானம், ஜபம், தெய்வீகச்
சிந்தனை இவற்றால் பாவம் குறைவதோடு புண்ணிய
பலன் நம்மை வந்தடையும்.
* யார் என்ன சொன்னாலும், மனதிற்குச் சரியென்று
பட்டதை துணிவோடு செய்து முடியுங்கள். நிச்சயம்
கடவுளின் துணை உங்களுக்கு கைகொடுக்கும்.
-சாரதாதேவியார்

No comments: