Thursday, March 08, 2012

தெய்வத்தன்மையை இழக்காதீர்

* தெய்வீகம் எப்போதும் மனிதனிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை விழிப்படையச் செய்து எழுந்திருக்கச் செய்யுங்கள்.
* ஒவ்வொரு கடமையும் புனிதமானது தான். கடமையில் பக்தியுடன் இருப்பது தெய்வ வழிபாட்டில் மிக உயர்ந்த முறையாகும்.
* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, பிறர் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கு உதவி செய்வதே.
* இன்னல்கள் அனைத்துக்கும் நடுவிலும், நமது தெய்வத்தன்மையை இழக்காமல் இருக்க வேண்டும்.
* கோயிலாலோ, விக்ரகத்தின் அழகாலோ இறைவன் மகிமை பெற்றான் என்பதில்லை. கடவுளால் தான் அவற்றுக்குப் பெருமை.
* பணத்திற்காக, உடல்நலத்திற்காக, சொர்க்கத்திற்காக, ஞானத்திற்காக அல்லாமல் மன சுத்தத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பிற பிரார்த்தனைகள் அனைத்தும் சுயநலம் தான்.
- விவேகானந்தர்

No comments: