Monday, July 22, 2013

மரியான் திரைவிமர்சனம் (MARYAN TAMIL MOVIE REVIEW)

அன்புள்ள நண்பர்களே,


வணக்கம். நலம்தானே? மீண்டும் ஒரு திரைவிமர்சனம் . ஒரு கடலும் கடல் சார்ந்த பகுதியும் மட்டும்மல்ல இந்த படம்.
அதுக்கும் மேல. ஆமாங்க மரியான் படத்தைதாங்க நாம பார்க்க போறோம். வாங்க நீந்தலாம்... இல்ல வாங்க பார்க்கலாம்.


மரியான்(தனுஷ்) கடலுக்குள்ள பாய்ஞ்சா மீனு இல்லாமா வர மாட்டாரு. அதனால ஊரே அவர கடல் ராசான்னு கொண்டாடுது.
ஒரே குடி, முரட்டுத்தனம் என்று இருக்கும் இவரை பனிமலர்(பார்வதி) உருகி, உருகி காதலிக்கிறாங்க(ஓ அதனாலதான் பனிமலர்ன்னு பேர் வச்சிருப்பாங்கலோ). ஆனா மரியான் என் மனசுல ஒண்ணும் இல்ல, அது வெத்து இடம் என்று சொல்ல. கடுப்பாகி விடுகிறார் பனிமலர். பனிமலர் நெருங்கி, நெருங்கி வர, மரியான் விலகி, விலகி ஓடுறாரு. ஒரு கட்டத்துல இவரும் காதல் வயப்படுகிறார்(பின்ன). ஊரில் இருக்கும் இன்னொரு தீக்குரசி நபருக்கும் பனிமலர் மீது காதல் வருகிறது(வில்லன் இல்லாம படமா?). மரியானும், பனிமலரும் காதல் செய்வது தெரிந்ததும் வீட்டுக்கு போய் பொண்ணு கேட்கிறார். பனிமலரின் தந்தை மறுக்க, அங்கே சண்டை வருகிறது. எங்கிட்ட வாங்கி இருக்கிற கடன கட்டு இல்லன்ன உம்பொண்ண எனக்கு கட்டுங்கிறாரு. 

பல முறை மரியானை வெளிநாட்டிற்க்கு அனுப்ப முயற்சிக்கிறார் தாய். ஆனால் மரியானோ நான் கடல் ராசா, இந்த உப்பு காற்று விட்டுட்டு நான் எங்கேயும் போக முடியாது என்று சொல்லி விடுகிறார். ஆனால் காதலியின் கடனை அடைக்க இரண்டு வரும் சூடானுக்கு போகிறார். போனிலே உருகுகிறார்கள். ஊருக்கு திரும்பும் நாளில் எதிர்பாராத விதமாக சூடான் நாட்டு தீவிரவாதிகள் , இவர்களை கடத்தி விடுகிறார்கள். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பினாரா? பனிமலருடன் இணைந்தாரா ? இதுவே மரியான் படங்க.


தனுஷ் இயல்பாக நடித்து அசத்துகிறார். அங்கங்கு சில நடிகளையும் நினைவு படுத்துகிறார். படத்தை ஆரம்பிக்கும் பொழுது குடி, குடியை கெடுக்கும் என்று நல்ல விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் படம் முழுக்க குடிப்பது போல் நிறைய காட்சிகள். இதை தவிர்த்திருக்கலாம். தனுஷின் நண்பனாக அப்புக்குட்டி இருக்கிறார். இவரை இலங்கை இராணுவம் கொன்று விட்டதாக கூறி இவர் கதையை முடித்து விடுகிறார்கள்.
அந்த காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. செயற்க்கையாக இருக்கிறது. இவர் இறந்து விட்ட சமயத்தில் இவர் அழுது கொண்டிருக்கிறார். அப்பொழுது போய் பார்வதி பெண்பார்க்க வருவதாக சொல்லி அழுகிறாள். ஆத்திரத்தில் இடுப்பில் எட்டி உதைக்கிறார். நமக்கே ஒரு நிமிஷம் நடுங்கி விடுகிறது. இந்த மாதிரி காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். உதைப்பது நல்ல விஷயம் போல காட்டி இருக்கிறார்கள். குட்டி ரேவதி அசோசியேட் டைரக்டராக இருக்கிறார். இவர் பெண்களை அடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

பார்வதி , பூ படத்தில் நடித்தவர். இதில் அனைத்து காட்சியிலும் மையிட்ட கண்களோடு வந்து பனி மாதிரி உருக வைக்கிறார்.
நன்றாக அடி வாங்குகிறார். கொஞ்சம் பாவமாகக் கூட இருக்கிறது.


இசை A R ரஹ்மான். பல இடங்களில் நமக்கு கடல் படத்தை நினைவு படுத்துகிறது. கொஞ்சம் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். நெஞ்சே எழு பாடல் இன்னொரு வந்தே மாதரம். எங்க போன ராசா, இன்னும் கொஞ்சம் பாடல்கள் இனிமை.


ஒளிப்பதிவு மிக அருமை. கடல் பகுதியின் அழகை நம் கண் முன்னே காட்டுகிறது.சாதிக்கிற பய அத்தன பேருக்கும் பொம்பள வாட பட்டுகிட்டே இருக்கணும் போன்ற சில வசனங்கள் புதிதாக இருக்கிறது.


பரத்பாலா இயக்கி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக் கெட்டிருக்கலாம். பெண்களின் ரோல்கள் என்று மாறப் போகின்றனவோ தெரியவில்லை? எப்பொழுது பார்த்தாலும் உம் புள்ளைய நான் சுமக்கணும், நீ எனக்குதாண்டா.......போன்ற வசனங்கள்.சூடானே வருமையான நாடு, அங்கே போய் என்ன சம்பாதிப்பது அது கொஞ்சம் உதைக்கிறது. இது 2008ல் நடந்த ஒரு சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது.


மரியான் என்றால் சாவே இல்லாதவன் என்று பொருளாம். நினைக்காதது வேனா நடக்காம இருக்கலாம். ஆனால் நினைக்கிறது கண்டிப்பா நடந்தே தீரும் என்று சொல்லும் நேர்மறையான வசனம் நன்றாக இருக்கிறது.

Directed byBharat Bala
Produced byVenu Ravichandran
Written byBharat Bala
Screenplay byBharat Bala
Sriram Rajan
StarringDhanush
Parvathi Menon
Salim Kumar
Music byA. R. Rahman
CinematographyMarc Koninckx
Editing byVivek Harshan



சில படம் முடிவதே தெரியாது. சில படம் எப்பொழுது முடியும் என்று இருக்கும்.
நீங்க படத்த பார்த்துட்டு சொல்லுங்களேன். இது எந்த மாதிரின்னு.


மீண்டும் சந்திப்போமா?


வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!

No comments: