Friday, September 11, 2015

திருமந்திரம்!

திருமந்திரம்!

 
நிற்கின்ற போதே நிலையுடையான் கழல்
கற்கின்ற செய்மின்; கழிந்து அனும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின்; தொழுத பின்
மற்றொன்று இலாத மணி விளக்காமே!

கருத்து: கற்பதற்கு உரிய பருவம், இளமைப் பருவம்; இறைவனின் சிறப்பியல்புகளை கூறும் நுால்களைக் கற்பதற்கு உரிய பருவமும் இளமைப் பருவமேயாகும். அவ்வாறு கற்பதால், நம்மைப் பீடித்துள்ள பாவங்கள் நீங்கும். கற்பதோடு நில்லாமல், அக்கண்ணுதலோனை வணங்குங்கள்! அக்கல்வி, இயல்பாகவே என்றும் ஒளிவீசும் மணி விளக்காக நின்று உங்களுக்கு உதவும்.

No comments: