Friday, December 07, 2012

நீர்ப்பறவை திரைவிமர்சனம் (Neerpparavai movie review in Tamil)

அன்பு நண்பர்களே!!
வணக்கம். நலம்தானே?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல படத்தின் விமர்சனத்தோடு உங்களை சந்திக்கிறேன்.
25 வருடங்களுக்கு முன் மீன் பிடிக்கப் போன தந்தை திரும்ப வில்லை.தாய் நடுஇரவில் வீட்டின் பின்பு உள்ள கல்லரையில் அமர்ந்து அழுகிறாள். மகனுக்கு சந்தேகம் வந்து, தோண்டிப்பார்க்க அங்கே ஒரு எலும்புக் கூடு மட்டும். இப்படித்தான் ஆரம்பிக்கிறது படம். ஆரம்பமே நம்மை நிமிர்ந்து உட்க்கார வைக்கிறது. கதை விறுவிறுப்பான க்ரைமாக இருக்குமோ என்று எதிர்ப்பார்த்தால் அதுதான் இல்லங்க.
தாய் எஸ்தரை கைது செய்ததும் , அவர் சொல்லும் கடந்த கால மீனவர்களின் கதையே "நீர்ப்பறவை". மிகவும் குடிக்கு அடிமைப் பட்ட நிலையில் இருக்கும் அருளப்பசாமி(விஷ்ணு), அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து அவரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்கிறார்கள். அவர் எஸ்தரை(சுனைனா) சந்திக்கிறார். இருவரும் காதல் வசப்படுகிறார்கள்.

ஆனால் குடிகாரன் மட்டுமல்லாமல் ஊர் முழுவதும் கடன் வாங்கி குடித்திருக்கும் அருளப்பசாமிக்கி பெண் கொடுக்க மறுக்கிறார் தாய். அதனால் கடலுக்கு சென்று மீன் பிடித்து முன்னேற நினைக்கிறார் அருளப்பசாமி.

ஆனால் இவர் இலங்கை தமிழராக இருந்து இங்கே வந்து வளர்வதால் மீனவர்கள் கடலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். எப்படி இவர் அனைவர் மனதையும் வென்று , கடலுக்கு சென்று, எஸ்தரை மணக்கிறார். யாருடயது அந்த எலும்புக்கூடு?, ஏன் அது அங்கே இருக்கிறது ?என்பதே கதை.

"அழகி"யில் அழகாக நம் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட நந்திதா தாஸ் வயதான எஸ்தராக மீண்டும். அதே மாறாத சோகம், நெஞ்சை பிழியும் அசத்தல் நடிப்பு.

அருளப்பசாமியின் தாயாக சரண்யா பொன்வண்ணன். எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்தக் கூடாதாம், அப்படி பண்ணா உசிரு போயிருமா என்று சொல்வதிலும் ஆகட்டும், மகனுக்கு செல்லம் குடுப்பதிலும் ஆகட்டும் அந்த வெள்ளந்தி நடிப்பில் நம் நெஞ்சை அள்ளுகிறார்.
உடுமன் கானியாக வரும் சமுத்திரக்கனி கொஞ்சம் வந்தாலும் அவர் சொல்லும் "மீனவர்கள் ரெண்டு பேரை சுட்டார்கள் என்பது சாதரண செய்தியாகி விட்டது" , "பத்திரிக்கைக்காரர்களும் தமிழ் மீனவர்கள் இறந்தார்கள் என்று மட்டும் போட்டுவிடுகிறார்கள்" போன்ற வசனங்கள் நெஞ்சில் ஆழப்பதிகின்றன. நமக்குள்ளும் என்று தீரும் இந்த பிரச்சினை?, என்று நம் மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் இறங்குவார்கள்? அரசு ஏன் இப்படி மெத்தனமாக இருக்கின்றது? என்று கேட்க தோன்றுகின்றன.

இளமை எஸ்தராக நடித்திருக்கும் சுனைனா நடிப்பில் ஒரு புது பரிணாமம். அவரின் எளிமையும், ஒரு சோகம் கலந்த புன்னைகையும் மிக அசத்தல்.
கடலுக்குள் சென்றவர் வராமல் தேடும் பொழுது சுனைனா கதறும் பொழுது, நம் கண்களிலும் கண்ணீர்.



விஷ்ணுவிற்க்கும் வெண்ணிலா கபடிக் குழுவிற்க்குப் பிறகு ஒரு நல்ல படம். மீனவர்கள் கடலுக்குள் அனுமதிக்காமல், அந்த ஒத்த கட்டுமரத்துல ஏறிக்காட்டு அப்புறம் பாக்கலாம் என்று சொன்னதும், விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து ஏறி நிற்க்கும் பொழுது நாமும் அங்கே ஜேயிப்பதுப் போல் ஒரு உணர்வு.
ஒவ்வொருவரும் தம்பி ராமைய்யா, அனுபமா ,பாண்டி மற்றும் வடிவுக்கரசி அனைவரும் அசத்தி இருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள் :).

 ஒவ்வொரு மீனவ மனைவியும், தாயும், தந்தையும் எப்படி பரிதவிக்கிறார்கள் மீனவனை கடலுக்குள் அனுப்பி விட்டு. அப்பப்பா, சொல்ல முடியாத சோகம்.

இசை யாருங்க , அட ரகுநாதன் அவர்கள். பரப்பர பறவை ஒன்று எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை. வாழ்த்துக்கள்.

கடலை அப்படியே நம் முன்னாடி அழகாக காட்டி இருக்கும் சீனு ராமசாமி அவர்களுக்கு ஒரு ஓ போடலாங்க :)




Directed bySeenu Ramasamy
Produced byUdhayanidhi Stalin
Screenplay bySeenu Ramasamy
Jeyamohan
StarringVishnu
Sunaina
Nandita Das
Saranya Ponvannan
Anupama Kumar
Music byN. R. Raghunanthan
CinematographyBalasubramaniem
Editing byM. Kasi Viswanathan
StudioRed Giant Movies
Distributed byRed Giant Movies
Release date(s)
  • November 30, 2012 (2012-11-30)
Running time137 minutes
CountryIndia
LanguageTamil


கிறித்துவம், இஸ்லாம் மற்றும் இந்து இப்படி அனைவரையும் ஒன்றாக , ஒற்றுமையாக காட்டி இருக்கிறார்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நாம எல்லோரும் ஒற்றுமையா இப்படியே இருக்கனும். என்னங்க நான் சொல்ரது உண்மைதானே. மீண்டும் அடுத்த படத்தில் சந்திப்போமா? வாழ்க வளமுடன்.



No comments: