Thursday, November 29, 2012

முயற்சி திருவினையாக்கும்

* பக்தி நமக்கு அதிகம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், தெய்வத்தை நம்பிவிட்டு, எந்த முயற்சியும் செய்யாமல் பொழுதைக் கழித்தால் தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும்.
* ஒரு விஷயத்தில் மன உறுதியுடன் தொடர்ந்து முயற்சித்தால், அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு நல்லமுடிவைத் தெய்வம் காட்டும்.
* முயற்சி திருவினையாக்கும் என்பது முன்னோர் உறுதிமொழி. எல்லாரும் எதிர்காலவளர்ச்சிக்கு முயற்சித்தால் தெய்வமும் நன்மைக்கு வழிவகுக்கும்.
* பலரும் ஒன்று சேரும்போது ஒருவருக்கொருவர் பிரச்னை, வருத்தம் உண்டாகலாம். அவற்றை வளர விடாமல் பேசித்தீர்ப்பது அவசியம்.
* நாம் குழந்தை போன்றவர்கள். குழந்தை அழுதால் தாய் பாலூட்டி பசிபோக்குவது போல, முயற்சிகளை தொடர்ந்து செய்தால் தெய்வம் நம் மீது இரக்கப்படும்.
* ஒரு முயற்சியை மேற்கொண்டால் அதில் வெற்றி உண்டாகும்வரை கண்ணும் கருத்துமாக பாடுபடவேண்டும்.
- பாரதியார்

No comments: