Friday, November 09, 2012

மாவீரன் நெப்போலியன்

பிரான்ஸ் நாட்டினை ஆட்சி செய்தவர் மாவீரன் நெப்போலியன்.

இந்த மாவீரன் வேற்று நாடாகிய இங்கிலாந்து நாட்டின் மருத்துவரும் விஞ்ஞானியுமான ஜென்னர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

மருத்துவர் ஜென்னர் கொள்ளை நோய் எனப்படும் வைசூரி நோய்...
க்கு மருந்து கண்டுபிடித்தவர்.

எதிரி நாட்டு விஞ்ஞானியை ஏன் மதிக்கிறீர்கள் என்று நெப்போலியனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு, மன்னர்களின் பெருமை போரில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்வதில் இருக்கிறது. அவர்களால் தாங்கள் அழித்த உயிர்களை மீண்டும் தர இயலாது. ஆனால், டாக்டர் ஜென்னர், வைசூரி நோயால் இறக்காமல் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் சேவையைச் செய்துள்ளார். எனவே, ஒரு மன்னர் விஞ்ஞானியை மதிப்பதுதான் நியாயம் என்று கூறியுள்ளார் மாவீரன் நெப்போலியன்.
 

No comments: